districts

நீதித்துறையை முடக்க துடிக்கும் பாஜக அரசை வீழ்த்துவோம்

நாமக்கல், மார்ச் 24- நீதித்துறையை முடக்கக்கூடிய வகையில் செயலாற்றி வரும் பாஜக அரசை வரும் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என அகில இந் திய வழக்கறிஞர்கள் சங்கம் அறை கூவல் விடுத்துள்ளது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநிலக்குழு கூட்டமானது நாமக்கல் மாவட் டம், திருச்செங்கோட்டில் உள்ள  தனியார் மண்டபத்தில் ஞாயி றன்று, சங்கத்தின் மாநில செயல்  தலைவர் ஏ.கோதண்டம் தலைமை யில் நடைபெற்றது. முன்னதாக, இக்கூட்டத்தில் சுதந்திர போராட்ட  தியாகிகள் பகத்சிங், ராஜகுகு, சுக தேவ் ஆகியோரின் உருவப்ப டங்களுக்கு மலர்தூவி அஞ்சலி  செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில், மத்தியில் ஆளும் பாஜக அரசு  கடந்த 10 ஆண்டுகளாக ஜனநாய கம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சமத்துவம், சமூகநீதி ஆகிய அர சியலைமைப்பு சட்டத்தின் அடிப் படை கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசியலைமைப்பு சட்டத்தின் கீழ் இருக்கும் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் சுதந்திரமாக செயல்பட விடாமல், தனது கட்டு பாட்டில் வைத்துக்கொண்டு, எதேச் சதிக்கார போக்கோடு செயல்படுகி றது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில  அரசுகள் நிறைவேற்றும் சட்டங் களுக்கு ஒப்புதல் கொடுக்காமல், மாநில அரசின் ஜனநாயக செயல் பாட்டை ஆளுநர் மூலம் முடக்கி வைக்கிறது. எனவே, சுதந்திரமான நீதித் துறை செயல்பாட்டை முடக்கக்கூ டிய வகையில் செயலாற்றி வரும்  பாஜக அரசை வரும் நாடாளு மன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கு மாற்றாக இந் தியா கூட்டணியை ஆதரிப்பது என் றும், சிறுபான்மை மக்களுக்கு எதி ராகவும், மக்கள் ஒற்றுமைக்கு எதி ராகவும், அரசியலைமைப்பு சட்டத் திற்கு விரோதமாக கொண்டு வரப் பட்டுள்ள குடியுரிமை திருத்தங்கள்  சட்டத்தை திரும்பப்பெற வேண் டும். நீதிமன்றத்தில் வழக்குகளை இனையதளம் மூலம் தாக்கல் செய்யும் புதிய முறையை, போதுமான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் வரை நிறுத்தி வைக்க  வேண்டும். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் மற்றும் மோகனூ ரில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன் றங்களில் போதிய உட்கட்டமைப்பு  வசதிகளை ஏற்படுத்த வேண்டும்,  உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, பெண் வழக்கறிஞர்கள் தொழில் ரீதியாக  சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து,  சங்கத்தின் மாநில பெண் வழக்கறி ஞர்கள் உபகுழு கன்வீனர் பாண் டீஸ்வரி விளக்கி பேசினார். மேலும்,  பெண் வழக்கறிஞர்கள் கோரிக் கையை வலியுறுத்தி ஏப்.22 முதல்  25 வரை மாநிலம் முழுவதும் வழக் கறிஞர்கள் மத்தியில் கையெ ழுத்து இயக்கம் நடத்துவதெனவும்  இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட் டது. இக்கூட்டத்தில், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ச.சிவக் குமார், மாநிலப் பொருளாளர் மாசே துங், நாமக்கல் மாவட்டச் செயலா ளர் சேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.