districts

img

இந்திய மக்கள் ஓரணியில் திரள்வோம் உண்மையான மாற்றத்தை உருவாக்குவோம்

திருப்பூர், செப்.14- இந்திய மக்கள் ஓரணியில் திரண்டு உண் மையான அரசியல் மாற்றத்தை உருவாக்கு வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்திய கட்டுப்பாட்டு ஆணைய தலை வர் ஏ.கே.பத்மநாபன் கூறினார். திருப்பூரில் செவ்வாயன்று தோழர் கே. தங்கவேல் இரண்டாம் ஆண்டு நினைவு தின  சிறப்பு பேரவை நடைபெற்றது. இதில், பங் கேற்று ஏ.கே.பத்மநாபன் பேசுகையில், இந் திய விடுதலைப் போராட்டத்தில் எந்த சம்பந்த மும் இல்லாதவர்கள் தங்கள் படுபாதக செயலை மறைப்பதற்காக வீடுகளில் சுதந்திர கொடியேற்றுங்கள் என்று சொன்னார்கள்.உண்மையாக செல்வத்தை உருவாக்கும் தொழிலாளர்களையோ, விவசாயிகளையோ குறிப்பிடாமல், உலக கோடீஸ்வரர்களாக வளர்ந்திருப்பவர்களை செல்வத்தை உரு வாக்கியவர்கள் என்று பிரதமர் மோடி வெட்க மில்லாமல் குறிப்பிடுகிறார். பல்வேறு தொழிலாளி வர்க்க போராட் டங்களில் மூலமாகத்தான தொழிலாளர்க ளுக்கான உரிமை கிடைத்தது. தொழிற்சங்க உரிமை, ஜனநாயக உரிமை, அடிப்படை உரிமை ஆகியவற்றை இப்போது ஆட்சி யில் இருப்பவர்கள் ஒவ்வொன்றாக பறித்துக் கொண்டிருக்கிறார்கள். சுதந்திரப் போராட்ட உணர்வோடும் அந்த வீரியத்தோடும் இன் றைய ஆட்சியாளர்களை எதிர்த்து போராட தயாராக வேண்டும். இப்போது மாற்றம் வேண் டும் என்று பேசுவதால் மட்டும் மாற்றம் வந்து  விடாது. அந்த மாற்றம் வர்க்க ரீதியான மாற்ற மாக இருக்க வேண்டும். நாற்காலியில் ஒரு வர் மாறி, இன்னொருவர் என்று வருவதை உண்மையான மாற்றமாக சொல்ல முடி யாது.

கடந்த 31 ஆண்டுகளில் காங்கிரஸ், பாஜக, ஐக்கிய முன்னணி, ஐக்கிய முற் போக்கு கூட்டணி என எந்த கட்சியாக, எந்த  முன்னணியாக இருந்தாலும், வர்க்க ரீதியாக ஒரே அணியாக தான் இருந்தது. ஏற்கனவே முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசாக இருந்தது. இப்போது வகுப்புவாதம் மக் களை மத அடிப்படையில் பிளவுபடுத்து வதும் சேர்ந்து கொண்டு மிக மோசமாக உள் ளது. மக்களை ஒற்றுமைப்படுத்தி ஒன்றாக இருக்கச் செய்வது தான் இதற்கு ஒரே தீர்வு. சனாதன தர்மத்தை எதிர்த்து போராடவிட் டால் 75 ஆண்டு கால தேச விடுதலை அர்த்த மற்றதாக மாறிவிடும், தனியார் பெரு முதலா ளிகளுக்கு தேசத்தின் சொத்து, நிலம், வங்கி,  காப்பீடு, காஸ் பைப்லைன் எல்லாமும் விற் கப்படுகிறது. இது தொழிலாளி வர்க்கம், உழைப்பாளி மக்கள், விவசாயிகளை சீர ழிக்க கூடியதாக உள்ளது. பெருந்தொற்று காலத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லி போராட்டத்தில் பங்கேற்று வீரமிக்கப் போராட்டத்தை நடத்தினர்.  சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சேர்ந்து கடந்த செப்டம் பர் 5 ஆம் தேதி டெல்லியில் பிரம்மாண்ட மான மாநாட்டை நடத்தினர். அதில் தொழிலா ளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள் மட்டுமல்லாது, நாட்டு மக்கள், அனைத்து ஜனநாயக சக்திகளின் 16 அம்ச கோரிக்கைகளை வைத்து அக்டோபர் மாதம் தொடங்கி அடுத்தாண்டு பட்ஜெட் கூட்டத் தொடர் வரை பிரம்மாண்டமான பிரச்சார இயக்கம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. தில்லியில் இருக்கும் ஆட்சி அசைக்க முடி யாதது அல்ல. இந்திய மக்கள் ஓர் அணியில் திரண்டால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்று போராட்ட பதாகையை உயர்த்த வேண் டிய அவசியம் உள்ளது. மக்களின் பிரச்ச னையை அரசியலோடு இணைக்க வேண் டும். அந்த அரசியலை, வர்க்க சார்பு அரசிய லாக மாற்ற வேண்டும். இதன்மூலம் அடிப் படை மாற்றத்தை உருவாக்க முடியும், என் றார்.