திருப்பூர், ஆக.13 - தேசத்தையும், கல்வி யையும் பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் இந்திய மாணவர் சங்கத்தினர் பல் லடத்தில் ஆசாதி (விடு தலை) பேரணி நடத்தினர். தேசத்தை பாதுகாப் போம், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், கல்வியை பாதுகாப்போம் என்கிற முழக்கத்தை முன் வைத்து தேசம் முழுவதும் “ஆசாதி பேரணி” நடத்திட இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய நிர்வாகக்குழு அறை கூவல் விடுத்திருந்தது. அதன்படி, பல்லடத்தில் மாணவர் சங் கத்தின் சார்பில் பேரணி நடைபெற்றது. ஞாயிறன்று காலை 10 மணியளவில் பல்லடம் தாலுகா தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில், பல்லடம் அரசு கலை அறி வியல் கல்லூரி முன்பு துவங்கிய இப் பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்திய அரசியல் அமைப்பையும், மதசார்பின்மையையும் பாதுகாப்போம் என்றும், கல்வி நிலைய வளாகங்களில் நடை பெறும் சாதி, மத மோதல்களுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இறுதியாக பேரணி தியாகி என்.ஜி.ஆர் சாலையில் நிறைவடைந்தது. இப்பேரணியை நிறைவு செய்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி சிறப்புரையாற்றினார். இதில் மாவட்டச் செயலாளர் பிரவீன் குமார், மாவட்டத் தலைவர் கல்கி ராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ஷாலினி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.