districts

img

பிப். 23, 24 வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் வெற்றிபெற செய்வோம் தொழிற்சங்கங்கள் சூளுரை

திருப்பூர், ஜன. 21 - ஒன்றிய மோடி அரசின் தொழி லாளர் விரோத, மக்கள் விரோத, தேச  விரோத நடவடிக்கைகளுக்கு எதி ராக பிப்ரவரி 23, 24 தேதிகளில் நடை பெறவுள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை திருப்பூர் மாவட்டத்தில் வெற்றி பெறச் செய்வதென அனைத்து பனியன்  தொழிற்சங்கங்களின் முன்னணி ஊழி யர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அனைத்து பனியன் சங்கங்களின் முன்னணி ஊழியர்கள் கூட்டம் வியா ழனன்று மாலை  ஊத்துக்குளி ரோடு,  ஏஐடியுசி மாவட்ட அலுவலகத்தில், எச்எம்எஸ் சங்க மாநில செயலாளர் முத்துசாமி தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு பனியன் பொதுத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், ஏஐடியுசி பனியன் சங்கப் பொதுச் செயலாளர் என்.சேகர், எல்பிஎப் பனி யன் சங்கத் தலைவர் ஜி.பாலசுப்பிர மணியம், ஐஎன்டியுசி மாவட்டச் செய லாளர் அ.சிவசாமி, எம்எல்எப் பனி யன் சங்கச் செயலாளர் மனோகர் உள் ளிட்டோர் கலந்து கொண்டு உரை யாற்றினர். இக்கூட்டத்தில், ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள தொழிலா ளர் சட்டத் திருத்தங்கள் திரும்பப் பெற வேண்டும். திருப்பூர் பனியன் தொழிலை பாதுகாக்க நூல் விலை உயர்வை குறைக்க வேண்டும். பனி யன் தொழிலாளர்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்க  வேண்டும். பொதுத்துறையை தனியாருக்கு விற்கும் நடவடிக்கை களை கைவிடுவதுடன், விவசாயி களின் உற்பத்தி பொருளுக்கு நியாய விலை வழங்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களின் நல வாரியங்களை முடக்கும் நட வடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் பொது  வேலை நிறுத்தப் போராட்டத்தில் அனைத்து பனியன் தொழிலாளர் களையும் பங்கேற்கச் செய்வது. அன் றைய தினம் நடைபெறும் ஆர்ப்பாட் டம் மற்றும் மறியல் போராட்டங்களில் பெருந்திரளான தொழிலாளர்களைப் பங்கெடுக்கச் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.