districts

கல்வி நலனை பாதுகாக்க பாஜகவை விரட்டுவோம்

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தற் போது வரை பாஜகவின் மோடி  அரசு கல்வியில் மிகப்பெரும் தாக்கு தல்களையும்; சிறுபான்மையினர், பட்டி யல் சமூகத்தினர், பழங்குடியினர் பிற்ப டுத்தப்பட்டோரின் கல்வி உரிமைகளில்  மிகக்கொடூரமான ஒடுக்குமுறையை யும் ஏவியுள்ளது. இதன்மூலம் கல் வியை மிக விலை உயர்ந்த வணிகப்பொ ருளாகவும், அதன் மூலம் கார்ப்பரேட் டுகளின் முதலீட்டுக்கான பொருளாக வும் மாற்றியுள்ளது. தொடர்ந்து கல்வி யில் காவியை புகுத்துவதற்கான நடவ டிக்கையாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மத்திய மற் றும் மாநில பல்கலைக்கழகங்களில் ஆர் எஸ்எஸ் பரிவாரத்தை சார்ந்த நபர் களை துணை வேந்தர்களாக நியமித்து  வருகிறது. மேலும், வேந்தராக இருக் கும் ஆளுநர்களும் சங்பரிவாரத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால், இந் நிலை மேலும் மோசம் அடைந்துள் ளது. எனவேதான் தமிழகம், கேரளம்  போன்ற மாநிலங்கள் மாநில ஆளுநர் களை வேந்தர் பொறுப்பில் இருந்து நீக் கும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறை வேற்றியுள்ளனர். இந்திய வரலாற்றை  மனுவாத அடிப்படையில் திரித்து வரு கிறது. சனாதன கோட்பாடுகளையும், வைதீக மரபுகளையும் இந்தியாவின் வர லாறாக மாற்றும் நடவடிக்கையை செய்து வருகிறது. சமீபத்தில் காசி தமிழ்  சங்கமம் என்ற பெயரில் இத்தகைய  வரலாற்று திரிபையே அரங்கேற்றியது. முகலாயர்கள், ஆங்கிலேயர் வரும்  வரை இந்து மன்னர்களால் இந்தியா வில் பாலாறும், தேனாறும் ஓடிய பொற் கால ஆட்சி நடந்தன என உண்மைக்கு மாறாக வரலாற்றை திருத்தி வருகிறது.  மேலும் “இஸ்லாமிய படையெடுப்பு” என்றும், “ஆரியர் வருகை” என்றும், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்து வம் போன்ற வார்த்தைகளை நீக்கியும் பாடபுத்தகத்தை வடிவமைத்து வரு கிறது. கர்நாடகாவில் பாடபுத்தகத்தில் ஆங்கிலேயர்களிடம் பலமுறை மன் னிப்பு கடிதம் எழுதிய “மன்னிப்பு கடித  புகழ்” சாவர்க்கரை விடுதலை போராட்ட வீரர் என குறிப்பிட்டு, அந்த மான் சிறையிலிருந்து “புல் புல்” பறவை யில் பறந்து வந்தார் எனவும், குஜராத் தேர்வில் மகாத்மா காந்தி எவ்வாறு தற் கொலை செய்து கொண்டார்? என  வினா இடம்பெற்றுள்ளதும்; பெண்கள்  எப்படி அடிமையாக இருக்க வேண் டும் என ஒரு பாடமே வடிவமைத் துள்ளதும்; ஒன்றிய அரசின் போட்டி தேர் வில் சாதிய பெயர்களை குறிப்பிட்டு எது கீழ்சாதி என கேட்பதும்; ஒலி மாசு  குறித்த வினாவில் “இஸ்லாமிய பாங்க்”  ஓசையை குறிப்பிடுவதும் என பல எடுத் துகாட்டுகளை அடுக்கி கொண்டே போகலாம். சிறுபான்மையினர் பட்டியல் சமூ கத்தினர் பழங்குடியினர் பிற்படுத்தப் பட்டோரின் கல்விக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிதிகளை படிப்படியாக குறைப் பதோடு, மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வி உதவித்தொகையையும் குறைத்து வருகிறது. கடந்த 2020 ஆம்  ஆண்டே ஆராய்ச்சி மாணவர்கள் மற் றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கி வந்த அனைத்து வகையான உதவித்தொகையையும் நிறுத்த துவங்கியுள்ளது. தற்போது கூட 2008  ஆம் ஆண்டு இடதுசாரிகளின் ஆதர வோடு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகையை நிறுத்தியுள்ளது. இது இந் தியாவின் புத்தம், சமணம், சீக்கியம், பார்சி உள்ளிட்ட அனைத்து சிறு பான்மை மாணவர்களின் கல்வியை யும் குழி தோண்டி புதைக்கின்ற நடவ டிக்கையாகும். உதவித்தொகை பெறும்  மாணவிகள் எண்ணிக்கையும் குறைந் துள்ளது.

1 முதல் 10 வகுப்பு வரையிலான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி இப் போது 9, 10 ஆம் வகுப்புக்கு மட்டும்  என அடாவடித்தனமாக அறிவித் துள்ளது. அரசியலமைப்புச் சட்டம் எட் டாவது அட்டவணையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 22 மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரித்துள்ள நிலையில், இந்தியை இந்தியாவின் அடிப்படை மொழியாக ஒன்றிய அரசு மாற்றியுள்ளது. இது அரசியல் சாசனம் பிரிவு 340 முதல் 351 வரை கூறியுள்ள அலுவல் மொழி  உரிமைக்கு எதிரானதாக அமைந்துள் ளது. மேலும் ஒன்றிய அரசின் அனைத்து  கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழியை பயிற்று மொழியாகவும், தேர்வு மொழியாகவும் மாற்றுவதற் கான நடவடிக்கையை துவங்கியுள் ளது. இது இந்தியாவின் மொழி பன்மு கத்தன்மையை அழிப்பதோடு மாநி லத்தின் உரிமைகளையும் பறிக்கின்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஒன்றிய பாஜக அரசு ஏழை, எளிய  மாணவர்களின் மருத்துவ கனவுகளை பரிக்கும் விதமாக பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வால் தமிழ கத்தில் மட்டும் அனிதா முதல் ஜெகதீ சன் வரை இதுவரை 16 மாணவர்கள்  தற்கொலை செய்துள்ளனர். மாணவர் களை பொது நுழைவுத்தேர்வுகள் தற் கொலைக்கு தூண்டுவதோடு மட்டு மின்றி, முறைசாரா கோச்சிங் நிறுவ னங்களையும் அசுர வேகத்தில் வளர்ச்சி  அடைய செய்துள்ளது. பாடத்திட்டத் தின் மீதான தாக்குதல், சிறுபான்மையி னர் கல்வி மீதான தாக்குதல், வேந்தர்  என்ற பெயரில் ஆளுநரின் அடாவடித் தனங்கள் என நாடு முழுவதும் கல்விச்சூ ழலைச் சிதைக்க மோடி அரசு முழு வீச்சில் ஏற்பாடு செய்துள்ளது. ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய  கல்விக் கொள்கை கல்வியை முழுமை யாக வணிகமயமாக்குவது, மத்திய  துவப்படுத்துவது, மதவெறி மயமாக்கு வது ஆகியவற்றை மட்டுமே நோக்க மாகக் கொண்டுள்ளது. இந்திய கல்வி முறையை நவீனப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான நோக்கமும்  இலக்கும் இல்லாமல் உருவாக்கப்பட்ட ஒரு கல்விக்கொள்கையாக உள்ளது.  இந்த கல்விக்கொள்கை பொதுக்கல் விக்கு அரசு செலவிடுவதை தவிர்க்கும் அல்லது வலுக்கட்டாயமாக மறுக்கும் விதமாக உள்ளது.

புதிய கல்விக்கொள்கை மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகள் அல்லது மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகா மையில் உள்ள பள்ளிகளோடு இணைத்து விட வேண்டும் என கூறு கிறது. மாணவர்கள் குறைவாக உள்ள  காரணத்தை கூறி பள்ளிகளை மூடுவ தால் மலை கிராமங்கள் மற்றும் கிரா மப்புற மாணவர்கள் ஆரம்பக் கல்வி பெறுவது மறுக்கப்படுகிறது. புதிய கல் விக்கொள்கை அமலாக்கத்தின் விளைவு 2018 - 19-ல் நாடு முழுவதும் 10,83,678 ஆக இருந்த அரசு பள்ளி கள் 2021-22யில் 10,23,386 ஆக குறைந் துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத் தில் மட்டும் அதிகப்படியாக 26,274 பள்ளி களை மாநில பாஜக அரசு மூடி உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது. உயர்கல்வி நிதி நிதி நிறுவனம் (HEFA) அமைப்பை புதிய கல்விக்கொள்கை - 2020 வலியு றுத்துகிறது. இதன் மூலம் பல்கலைக்க ழகங்களுக்கு வழங்கும் மானியங் களை நிறுத்திவிட்டு, கடனாக வழங் கும் இந்த உயர் கல்வி நிதி நிறுவனம்.  கடன்களை ஒரு குறிப்பிட்ட கால இடை வெளியில் பல்கலைக்கழகங்கள் திரும்ப செலுத்த வேண்டும். ஏற்கனவே  இந்த நடைமுறையைப் பின்பற்றும் அமெரிக்காவில் 4.5 கோடி மாணவர் கள் கடனாளிகளாகவும் சராசரி ஒரு  மாணவருக்கு அமெரிக்க மதிப்பில் 30  ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.24,93,901) கல்விக்கடன் இருப்பதாக விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடைமுறை இந்தியாவிலும் அமலானால் என்ன ஆகும். ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கை பல்க லைக்கழகங்களின் ஆய்வு சுதந்தி ரத்தை பறிக்கும் விதமாகவும் பல்க லைக்கழகங்களின் தனித்தன்மையை சிதைத்தும் அனைத்தையும் மத்தியத்து வப்படுத்தும் விதமாகவும், தேசிய ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பை உருவாக்குகிறது. இதன் மூலம் இந்தி யாவில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆய்வுகளையும் இந்த அமைப்புதான் அனுமதிக்கும். ஆராய்ச் சிக்கான தலைப்பை முடிவு செய்வது,  ஒப்புதலளிப்பது துவங்கி அதற்கு உத வித்தொகை வழங்குவது உள்ளிட்ட அனைத்தையும் இந்நிறுவனமே முடிவு  செய்யும். தேசியக் கல்விக்கொள்கை (NEP) 2020-ஐ அறிமுகப்படுத்தும் போது, ஒன்றிய கல்வி அமைச்சகம் 2030  ஆம் ஆண்டுக்குள் GER (பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்குச்சேரும் மாணவர்களின் விகிதம்) 50 விழுகு காடாக உயரும் எனக் கூறியது. ஆனால், தற்போதுள்ள 27 விழுகு காடு GER விகிதமும் பின்னடைவை சந் தித்து,

இன்னும் இருபது ஆண்டு களானாலும் இந்த இலக்கை அடைய முடியாத அளவிற்கு பின்னுக்குச் சென் றுள்ளது. காரணம் பிற்போக்கான தேசிய கல்விக்கொள்கையும் கார்ப் பரேட்டுகளுக்கு ஆதரவான அரசின் கொள்கைத் திட்டமிடுதலுமேயாகும். இது ஒருபுறமிருக்க கடந்த பத்து ஆண்டுகளில் தலைநகர் புதுதில்லியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொ டுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரு வதும் அவை முறையாக காவல் நிலை யங்களில் பதிவு செய்யப்படாமல் ஆளு கின்ற ஒன்றிய அரசாங்கம் சாதிய, மத வாத, ஆணாதிக்கவாதிகளுக்கு ஆதர வாக இருப்பதும் தொடர்ந்து வருகிறது என்பது வேதனையளிக்கிறது. உனா,  தாத்ரி, கத்துவா தொடங்கி தற்போ தைய மணிப்பூர் வரை பெண்களுக்கு எதிராக நடந்த கொடூர வன்முறை நிகழ் வுகள் அவற்றிற்கு கட்டியம் கூறுவ தாக அமைந்துள்ளது. இவற்றை அனைத்திற்கும் எதிராக 1970 முதல் 54  ஆண்டுகளாக இந்தியாவில் அனை வருக்கும் இலவச கட்டாய அறிவியல் பூர்வமான கல்வி கேட்டு போராடிவரும் இந்திய மாணவர் சங்கம், இந்திய கல்வியில் உரிய தலையீடுகளை செய்து நவதாராளமயம் மற்றும் கல்வி வணிகமும் மாணவர்களை விழுங்கிவிடாமல் பாதுகாத்து வருகி றது. கல்விக்கான போராட்ட வரலாற்றி லிருந்தும் மிகச் சிறந்த கல்வியாளர்க ளைக் கொண்டும் புதிய கல்விக் கொள்கை 2020க்கு மாற்றான கல்விக் கொள்கை வரைவை முன்வைத்து புதிய கல்விக் கொள்கை 2020ஐ எதிர்க் கிறது. கல்வியை கார்ப்பரேட் கம்பெனிக ளுக்கு விற்பது மட்டும் அல்லாமல்  கல்வியில் மத, இன வெறிகளை  வேரூன்றி மொழி திணிப்புகளை ஏற்ப டுத்தி அதன் மூலம் மாணவர்களையும் இளைஞர்களையும் பிளவுபடுத்துவ துடன், மிகப்பெரிய கலவரத்தை ஏற்ப டுத்தி இந்திய நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்க நினைக்கும் ஒன்றிய பாசிச பாஜக மோடி அரசை விரட்டி அடித்து இந்திய அரசியலமைப்பை பாதுகாக்க இந்தியர்களாய் இணை வோம்.

தே.சரவணன், மு.தங்கராஜ்
இந்திய மாணவர் சங்கம்