districts

img

மோடி அரசிற்கு எதிராக இடதுசாரிகள், விசிக ஆர்ப்பாட்டம்

கோவை, மே. 26 – ஒன்றிய மோடி அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து  இடது சாரிகட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோவையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கோவை கணபதி ‘பேருந்து நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். சிவானந்த காலனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்ம நாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வராஜ், விசிக குரு உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். மேலும், பீளமேடு, சுந்தராபுரம், துடியலூர் உள்ளிட்ட பகுகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், சிபிஐ (எம்எல்) மாவட்ட செய லாளர் தாமோதரன் மற்றும் இடதுசாரி கட்சிகள், விடு தலை சிறுத்தைகள் கட்சியினர் திரளாக பங்கேற்று மோடி அரசிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.