districts

img

ஒன்றிய அரசைக் கண்டித்து இடதுசாரி கட்சியினர் மறியல்; கைது

தருமபுரி, ஆக.1- தமிழ்நாட்டை புறக்கணித்து நிதிநிலை அறிக் கையை தாக்கல் செய்த ஒன்றிய அரசைக் கண் டித்து, மாநிலம் முழுவதும் இடதுசாரி கட்சியினர் வியாழனன்று பல்லாயிரக்கணக்கனோர் பங்கேற்று, கைதாகினர். அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ஒன் றிய நிதிநிலை அறிக்கையில், ஆட்சியை தக்க  வைப்பதற்காக மட்டுமே, குறிப்பிட்ட சில மாநி லங்களுக்கு மட்டும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம் ஆகிய வற்றின் பெயர்கள் கூட அறிக்கையில் இடம்பெற வில்லை. இதனைக் கண்டித்தும், மக்கள், தொழி லாளர், விவசாயிகள், மாணவர்கள் விரோத பட் ஜெட்டைக் கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று மறியல் போராட்டத் திற்கு இடதுசாரி கட்சிகள் அறைகூவல் விடுத் திருந்தன. அதன்படி, வியாழனன்று தருமபுரி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர். சிசுபாலன் தலைமை வகித்தார். இதில் மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பி னர் எஸ்.தேவராசன், மாவட்ட துணைச்செயலா ளர் மாதேஸ்வரன், தமிழ் மாநில விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜே.பிரதா பன், ஒன்றியச் செயலாளர் பிரசாத், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)லிபரே சன் மாவட்டச் செயலாளர் கே.கோவிந்தராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.முருகன், சிவ ராமன், ராமதிலகன், அன்பழகன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.நாகரா சன், எம்.முத்து, எஸ்.கிரைஸாமேரி, நகரச் செய லாளர் சி.முரளி, ஒன்றியச் செயலாளர்கள் என். கந்தசாமி, டி.எஸ்.ராமச்சந்திரன், எஸ்.எஸ்.சின் னராஜ், பி.ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கே.என்.மல்லையன், கே.பூபதி, ஏ. ஜெயா உட்பட பலர் கலந்து கொண்டு, கைதா கினர். அரூர் ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற மறி யலுக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ. குமார் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் சோ.அருச்சுணன், ஆர்.மல் லிகா, ஒன்றியச் செயலாளர்கள் பி.குமார், தி.வ. தனுசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி. வஞ்சி, எஸ்.கே.கோவிந்தன், ஏ.நேரு, கே.என். ஏழுமலை, பி.வி.மாது, ஜோதி, சிபிஐ மாநிலக் குழு உறுப்பினர் கமலா, மாவட்ட துணைச்செய லாளர் காசி.தமிழ்குமரன், ஒன்றியச் செயலா ளர் சிற்றரசு உட்பட பலர் கலந்து கொண்டனர். பென்னாகரம் இந்தியன் வங்கி முன்பு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன், சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கோபால் ஆகியோர் தலைமையில் மறியல் நடைபெற்றது. இதில் சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ்.கலை செல்வம், நிர்வாகக்குழு உறுப்பினர் மாதையன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வே. விசுவநாதன், ரவி, ஆர்.சின்னசாமி, ஒன்றியச் செயலாளர்கள் ஜி.சக்திவேல், என்.பி.முருகன், நகரச் செயலாளர் வெங்கடாசலம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் அன்பு, ஆ.ஜீவானந்தம், குமார், டி.ஆர்.சின்னசாமி, சி.ராஜி உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் இந்தியன் வங்கி முன்பு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி தலைமையில் மறியல் நடைபெற்றது. இதில் கட் சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். வேலுச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் சரவ ணன், நாமக்கல் பிரதேச கமிட்டி செயலாளர்  இ.எம்.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண் டனர். ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக்குழு முன் னாள் உறுப்பினர் மணிவேல், சிபிஎம் மாவட் டச் செயலாளர் எஸ்.கந்தசாமி ஆகியோர் தலை மையில் மறியல் நடைபெற்றது. இதில் மாவட் டக்குழு உறுப்பினர் பேட்டை செல்வராஜ் உட் பட திரளானோர் கலந்து கொண்டனர். குமார பாளையம் இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற மறியலில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி. சிங்காரவேலன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி.பெருமாள், மாவட்டக்குழு உறுப்பினர் எம். ஆர்.முருகேசன், நகரச் செயலாளர் சக்திவேல், ஒன்றியச் செயலாளர் ஆர்.ரவி, சிபிஐ நிர்வாகக் குழு உறுப்பினர் கார்த்திகேயன், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் நிர்வாகி பொன்.கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கொல்லிமலை ஒன்றியம், செம்மேடு பகுதியில் நடைபெற்ற சாலை மறிய லுக்கு சிபிஎம் கிளைச் செயலாளர் கே.வி.ராஜ்  தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.டி.கண்ணன், மாவட் டக்குழு உறுப்பினர் எம்.தேன்மொழி உட்பட பலர் கலந்து கொண்டனர். பரமத்திவேலூர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்க மணி தலைமை வகித்தார். இதில் சிபிஐ மாவட் டச் செயலாளர் அன்புமணி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றியச் செய லாளர்கள் வெங்கடாசலம், தேவராஜன், மாவட் டக்குழு உறுப்பினர் பழனியம்மாள், தாலுகாச் செயலாளர் சண்முகம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே நடைபெற்ற சாலை மறியலில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெய மணி உட்பட இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு, கைதாகினர்.

சேலம்

சேலம் கோட்டை மைதானம் அருகே உள்ள ஸ்டேட் பேங்க் முன்பு சிபிஎம் மாவட்டச் செயலா ளர் மேவை.சண்முகராஜா தலைமையில் மறி யல் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் கே.சி.கோபிகுமார், சிபிஐ மாவட்டச் செயலாளர் மோகன், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முரு கன் உள்ளிட்ட கலந்து கொண்ட 300க்கும் மேற் பட்டோரை காவல் துறையினர் கைது செய்த னர். நங்கவள்ளியில் சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் கே.ராஜாத்தி தலைமையில் மறியல் நடை பெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஏ.ராமமூர்த்தி, இளங்கோ, மேட்டூர் செய லாளர் வசந்தி, மேச்சேரி செயலாளர் மணிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். ஓமலூரில் சிபிஎம் தாலுகாச் செயலாளர் ஈஸ்வரன் தலை மையில் நடைபெற்ற மறியலில், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, சிபிஐ நிர் வாகி மதியழகன் உட்பட பலர் பங்கேற்றனர். சங்ககிரியில் சிபிஎம் தாலுகாச் செயலா ளர் ஆறுமுகம் தலைமையில் மறியல் நடைபெற் றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கே.சேகர், ஒன்றியச் செயலாளர் முத்துசாமி, தாலுகாச் செயலாளர் பெரியண்ணன், சிபிஐ நிர் ்வாகி பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண் டனர். ஆத்தூரில் சிபிஐ தாலுகாச் செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற மறிய லில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். முருகேசன், சிபிஐ செயலாளர் சடையன் ஆகி யோர் பங்கேற்றனர். கருமந்துறையில் சிபிஐ செயலாளர் பாக்யராஜ் தலைமையில் நடை பெற்ற மறியல் போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, மாவட்டம் முழுவ தும் நடைபெற்ற மறியலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைதாகினர்.