districts

img

எங்களின் நிலத்தை விட்டு விடுங்கள்: பெண்கள் மண்டியிட்டு ஒப்பாரி

சேலம், செப்.19- சரபங்கா உபரிநீர் திட்டத்திற்காக விளை நிலங்களை அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவ லகத்தில் பெண்கள் தரையில் மண்டி யிட்டு ஒப்பாரி வைத்து போராட்டத் தில் ஈடுபட்டனர். மேட்டூர் அணையிலிருந்து செல் லும் உபரிநீரை ஏரிகளில் நிரப்புவதற் காக காவிரி சரபங்கா உபரிநீர் திட்டம்  கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 100 ஏரிகளை நிரம்பி, அப்பகுதியில் உள்ள விவசாயத்திற்கு பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்ட திட் டமிடப்பட்டது. இந்நிலையில், மேட் டூர் வட்டம், சூரப்பள்ளி கிராமத்தில் இந்த சரபங்கா உபரிநீர் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனி டையே அப்பகுதியில் 400க்கும் மேற் பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் பல ஆண்டு காலமாக வசித்து வரு கின்றனர். இத்திட்டத்திற்காக அப் பகுதியில் உள்ள இரண்டு ஏக்கருக்கு மேலான விளை நிலங்களை கைய கப்படுத்துவதற்கு அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. இதனை திரும்பப் பெற வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலமுறை ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் உள் ளிட்ட அரசு அதிகாரிகள் மனு அளித்து வருகின்றனர். ஆனால், அரசு செவி சாய்த்ததாக தெரியவில்லை. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  தரையில் மண்டியிட்டு ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது, “எங்களின் நிலத்தை விட்டு  விடுங்கள். திட்டத்தை ஏற்கனவே உள்ள நீரோடை வழியாக கொண்டு  செல்லுங்கள்” என்று கூறி கதறி அழு தனர். இதைத்தொடர்ந்து காவல் துறை யினர் அவர்களை சமாதானம் செய்து ஆட்சியரிடம் மனு வழங்க அனுமதித் தனர் இதனால் அந்த பகுதியில் பர பரப்பு நிலவியது.