சேலம், ஆக.5- மூத்த வழக்கறிஞர்களிடமிருந்து, இளைய வழக்கறிஞர்கள் அனுபவத்தை கற்று கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரை வழங்கினார். சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தில் ரூ.59 கோடி மதிப்பீட்டில் 16 நீதிமன்ற கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனியன்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளர்களான சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் உரையாற்றி னார். காவல் துறை துணைத்தலைவர் ராஜேஸ் வரி, மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா பேசுகையில், தற்போது கட்டப்படும் கட்ட டங்கள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கட் டப்பட்டால், இந்தியாவிலேயே சேலம் நீதி மன்றம் முன்னோடியாக திகழ வாய்ப்புகள் உள்ளது. நீதிமன்றங்கள் முன்பெல்லாம் காகி தத்தால் எழுதுகின்ற வகையில் செயல்பாடு இருந்தது. தற்போது அதிநவீன தொழில் நுட் பத்தினால் அனைத்து நீதிமன்றங்களிலும் காகிதம் இல்லாமல் செயல்படும் நிலைமை வந்துள்ளது. எனவே, அதிக தொழில்நுட்பத் துடன் கூடிய நீதிமன்ற கட்டடங்கள் உருவாக் கப்பட வேண்டும். மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனை பெற்று, இளைய வழக்கறிஞர் கள் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும். இளைய வழக்கறிஞர்களுக்கு அனுபவம் இருக்காது. எனவே, மூத்த வழக்கறிஞர்களி டம் அனுபவத்தை கற்றுக்கொண்டு செயல் பட்ட வேண்டும். என்றார். சேலம் நீதிமன்ற நீதி பதி கிறிஸ்டல் பவிதா நன்றி கூறினார்.