சேலம், டிச. 25- ஆத்தூரில் சந்தேகத்தின் பேரில் வீரக னூர் போலீசார் விசாரணைக்காக அழைத் துச் சென்று தாக்கப்பட்டு ஆத்தூர் அரசு மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாண வர்களை மலைவாழ் மக்கள் சங்கத் தலை வரும், முன்னால் எம்எல்ஏ டில்லிபாபு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இலுப்பநத்தம் கிராமம் தெற்கு தெரு சேர்ந்த வர் முருகன் இவருக்கு யுவராஜ் (19) புஷ்ப ராஜ் (18) ஆகிய இரண்டு மகன்கள் இருவ ரும் கல்லூரி படித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் இலுப்பந்தம் கிராமத் தில், வீரகனூர் போலீசார் சந்தேகத்தின் பெய ரில் இரண்டு மாணவர்களையும் அழைத்துச் சென்று விசாரணையின் போது தாக்கிய தாக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவ ரும் அரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான டெல்லி பாபு அவர்கள் மருத்துவமனை யில் மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத்தொடர்ந்து டில்லிபாபு செய்தி யாளர்களிடம் கூறுகையில், கல்லூரி படிக்கும் மாணவர்கள் மீது சந்தேகத்தின் பெயரில் விசாரணைக்கு அழைத்துச் சென்று கடுமை யாக தாக்கப்பட்டு அரசு மருத்துவமனை அனு மதிக்கப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவர் களை தாக்கிய காவல் உதவி ஆய்வா ளர் மற்றும் காவலர்கள் மீது தமிழக முதல் வர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகி யோர்கள் துறை ரீதியான நடவடிக்கையை ஒரு வாரத்திற்குள் எடுக்க வேண்டும் என்றும். இல்லையென்றால் இதைக் கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் அனைவரையும் திரண்டு மிகப்பெரிய அள வில் ஆத்தூரில் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.