கோவை, பிப்.20- தில்லியில் போராடிவரும் விவசா யிகளுக்கு ஆதரவு தெரிவித்து கோவை யில் இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. விவசாய விலை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க கோரி ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி தில்லியில் போரா டிவரும் விவசாயிகள் மீது ஒன்றிய அரசு நிகழ்த்தும் கொடூரமான தாக்கு தல்களை கண்டித்தும், அவர்களது கோரிக்கையை உடனடியாக நிறை வேற்ற ஒன்றிய பாஜக அரசை வலியு றுத்தியும் இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின்(IAL) ஒருங்கிணைக்குழு சார்ப்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐஏஎல் மாவட்டத் துணைத் தலைவர் அர்ஜு னன் தலைமை வகித்தார். பியுசிஎல் தேசியச் செயலாளர் ச.பாலமுருகன், மாவட்டச் செயலாளர் சேகர் அண் ணாதுரை, ஏயுஎஸ்ஜே மாவட்டச் செய லாளர் வெண்மணி, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜோதிகுமார், ஐஏஎல் மாவட்டத் தலைவர் இரவி, மாவட்டச் செயலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் திரா ளன வழக்கறிஞர்கள் பங்கேற்று ஒன் றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.