districts

img

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றிடுக

கோவை ஏப்.12- நாடு முழுவதும், வழக்கு களில் சம்பந்தப்பட்டவர் கள், வழக்கறிஞர்களை தாக்குவது, கொலை செய் வது போன்ற நடவடிக் கைகள் தொடர்கிற நிலையில், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறை வேற்ற வலியுறுத்தி கோவை யில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்  கோவை  ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய  வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமர் தலைமை ஏற்றார். மாவட்ட செயலாளர் ஜோதி குமார் முன்னிலை வகித் தார். இதில், கோயம்புத்தூர் பார் அசோசி யேசன் தலைவர் கே.என். தண்டபாணி  கவன ஈர்ப்பு உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு வழக்கறி ஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் திரளான வழக்கறிஞர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். முடிவில், மு.ஆனந்தன் நன்றி கூறினார்.