திருப்பூர், ஏப். 25 - உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரி திருப்பூரில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய உயர் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. கீழமை நீதிமன்றங்களில் மாநில மொழிகள் வழக் காடு மொழியாக இருக்கின்ற நிலையில் உயர் நீதிமன்றங்களிலும் அந்தந்த மாநில மொழி கள் வழக்காடு மொழிகள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி உயர் நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தில் மொழியை அறிவிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் இருப்பதால், உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக ஆக்க வேண் டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பாக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் சுப்பராயன் தலைமை வகித்து பேசினார். கோரிக்கையை விளக்கி சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செய லாளர் பி.மோகன் உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த வழக்கறி ஞர் எஸ்.கண்ணன், வழக்கறிஞர் சங்க நிர்வா கிகள் எஸ்.பொன்ராம், அ.மணவாளன், வை. ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப் பாட்டத்தின் நிறைவாக மாவட்ட பொருளா ளர் ஒ.உதயசூரியன் நன்றி கூறினார். கையெழுத்து இயக்கம் இந்த ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக அகல இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் களிடம் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தினர். வழக்கறிஞர்கள் ஆர் வத்துடன் கையெழுத்திட்டனர்.