சேலம், ஜூலை 5- ஒன்றிய மோடி அரசு அறிவித் துள்ள புதிய குற்றவியல் சட்டங் களை திரும்பப்பெற வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் தீவிர போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் ஏற்கெனவே நடைமுறை யில் உள்ள இந்திய தண்டனைச் சட் டத்தை மாற்றி, மூன்று புதிய குற்ற வியல் சட்டங்களை ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்தது. இதற்கு ஆரம்பக்கட்டதிலிருந்தே வழக்கறி ஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர். இந்த சட்டங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப் பட்டது. இவற்றை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள், தொடர் நீதிமன்றப் பணி புறக்கணிப் பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில், வெள்ளியன்று சேலத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறி ஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட் டுள்ளனர். தொடர்ந்து சேலம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், 100க்கும் மேற்பட்டோர் சேலம் ஒருங் கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் இதேபோன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வலியு றுத்தி, திமுக வழக்கறிஞர் அணியி னர், நாமக்கல் நீதிமன்ற நுழைவா யில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் பி.வடிவேல், அ. அகிலன் ஆகியோர் தலைமை வகித் தனர். இதில் மூத்த வழக்கறிஞர்கள் எம்.ரமேஷ், ராஜரத்தினம், சக்தி வேல், யுவராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.