districts

img

ஒன்றிய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி

கோவை, செப்.14- இந்திய தண்டனைச் சட்டத்திற்கு இந்தியில் பெயர் மாற் றம் செய்த மசோதவை திரும்ப பெறக்கோரி கோவை வழக்கறி ஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங் களை கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்தியில் பெயர் மாற்றம் செய்து ஒன்றிய பாஜக அரசு மசோதா தாக்கல் செய் துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கோவை  வழக்கறிஞர்கள் சங்கம் மூன்று நாட்கள் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக,  வியாழ னன்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில், 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட் டத்தில் கலந்து கொண்டனர். மேலும், ஏற்கனவே அறிவித் துள்ளபடி வெள்ளியன்று (இன்று) சென்னையில் நடைபெற  உள்ள பேரணியில் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பங்கேற்க உள்ளனர்.