districts

img

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு துவக்கம்

சேலம், ஆக.18-  தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல  அமைப்பு சேலம் மாவட் டத்தில் புதிய கிளை துவக்க  நிகழ்ச்சி சிஐடியு மாவட் டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கிளை அமைப்புக் கூட்டத்திற்கு, அன்பழகன் தலைமை ஏற்றார். இதில் மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியம், துணை பொதுச் செயலாளர் சுப்பிரமணி, மண்டலச் செய லாளர் காளியப்பன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வு  பெற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப் பலன்கள் வழங்க வேண்டும். மின்சார வாரி யம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும். பழைய ஓய்வூதிய  திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டத. இதில், தலைவராக எ.அன்பழகன், செய லாளராக எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின்  சேலம் செயலாளர் ரகுபதி, தலைவர் கருப் பண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று உரை யாற்றினர்.