districts

img

சிஐடியு சுமை தூக்கும் தொழிலாளர் சங்க புதிய கிளை துவக்கம்

சேலம், ஜன.1- சேலம் மேற்கு அரியாக்கவுண்டம்பட்டி தமிழ்நாடு வேர்ஹவுஸ் குடோனில் சேலம் ஜில்லா சுமை தூக்கும் தொழிலாளர் சங்க புதிய கிளை துவக்க விழா கிளை தலைவர் மாணிக்கம் தலைமையில்  நடைபெற்றது. கிளை செயலாளர் விஜயலிங்கம் வர வேற்றார். சிஐடியு செங்கொடியை சுமைப் பணி தொழிலாளர் சங்க சம்மேளன பொதுச் செயலாளர் ஆர்.வெங்கடபதி ஏற்றி வைத்தார். பெயர் பலகையை விசைத்தறி மாவட்ட செய லாளர் பி.சந்திரன் திறந்து வைத்தார். சுமைப்பணி மாவட்ட செயலாளர் ஏ.கோவிந்தன், சிபிஎம் மேற்கு மாநகர செய லாளர் எம்.கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பி னர் பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப்  பேசினர். இதில் சுமைப்பணி தொழிலாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.