உதகை, ஜன.2- கடந்தாண்டில் (2022) சுமார் 24 லட்சம் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளதாக தோட்டக்கலைத்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் உள்ள மலை பகுதி களில் நீலகிரி மாவட்டம் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. நீலகிரி மாவட்டத் தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற் றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழ கத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங் கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். பொது வாக ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் முதலா வது சீசனும், செப்டம்பர், அக்டோபர், நவம் பர் மாதங்களில் இரண்டாவது சீசனும் களை கட்டும். நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரி யும் சுற்றுலா பயணிகளுக்கு தமிழ்நாட்டின் கலை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத் தும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பிற துறைகள் சார்பில் கோடை விழா நடத்தப் படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல், மே சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக கோடை விழா ஏப்.7 ஆம் தேதியன்று தொடங்கி ஏப்.31 ஆம் தேதியன்று வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. அதே போல் கடந்த மே 14 மற்றும் 15 ஆகிய தேதி களில் உதகை ரோஜா பூங்காவில் ரோஜா மலர் கண்காட்சியும், மே 18 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை உதகை படகு இல்லத்தில் படகு போட்டியும், மே 28, 29 ஆம் தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சியும் நடைபெற்றது. இதே போல் கோடைவிழாவின் முக்கிய நிகழ்ச்சி யான உதகை மலர் கண்காட்சி, உதகை தாவர வியல் பூங்காவிலும் நடைபெற்றது. இதன்படி கோடை சீசனான ஏப்ரல், மே ஆகிய 2 மாதங் களில் உதகை தாவரவியல் பூங்காவிற்கு சுமார் 7.50 லட்சம் பேர் வந்தனர். இதையடுத்து 2 ஆவது சீசன் மற்றும் தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை, பள்ளி விடு முறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பய ணிகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்த னர்.
இதன் மூலம் கடந்த ஒரு ஆண்டில் உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு 24 லட்சத்து 12 ஆயிரத்து 483 பேர் வருகை தந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த சுற்றுலா பயணிகள் கடந்தாண்டு குடும்பத்துடன் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து கோடை விழாக்களை கண்டு களித்த னர். மேலும், உதகையில் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, பைக் காரா உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சுற் றுலாத் தலங்களுக்கு சென்று பார்வையிட்ட னர். கொரோனா பரவல் காரணமாக வியாபா ரம் மந்த நிலையில் இருந்த நிலையில், சுற் றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்த தால் வியாபாரிகள் மற்றும் விடுதி உரிமையா ளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தோட்டக்கலை துறை அதி காரிகள் கூறுகையில், வழக்கமாக ஒவ் வொரு ஆண்டும் சுமார் 25 லட்சம் பேர் உதகை தாவரவியல் பூங்காவுக்கு வருவார்கள். கடந்த 2017 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 30 லட்சம் பேர் வந்தனர். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு 5 லட்சத்து 3 ஆயிரத்து 545 பேர் மட்டுமே வந்த னர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந் துள்ளதால், கடந்தாண்டு (2022) 24 லட்சம் பேர் வந்தனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல் படுத்த முடிவு செய்துள்ளோம், என்றனர்.