districts

விற்பனை நிலையத்தில் மடிக்கணினிகள் திருட்டு

திருநெல்வேலி, ஏப்.28-நெல்லை மாவட்டம் பாளை. முருகன்குறிச்சியில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர்களுக்கு காட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த லேப்டாப்கள் சில கணக்கில்வராமல் இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து விற்பனை நிலையத்தின் உரிமையாளர் விமல்ராஜ் கணக்குகளை சரிபார்த்தபோது 18 லேப்டாப்கள் திருடு போனது தெரியவந்தது. இதன்மதிப்பு சுமார் ரூ.7 லட்சம். உடனடியாக அவர் அங்குள்ளசிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, கடை ஊழியர் ஒருவர் அந்த லேப்டாப்களை எடுத்து தனதுபையில் வைப்பது தெரியவந்தது.இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசில் விமல்ராஜ்அளித்த புகாரின்பேரில், கடை ஊழியரான பெருமாள் புரத்தைச் சேர்ந்த டார்லின் (30) என்பவரை பிடித்து விசாரித்த போது, அவர் லேப்டாப்களை திருடி பாதி விலைக்குவிற்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.

;