அவிநாசி, செப்.4- அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேசன் ரோட்டரி சங்கம் சார்பில் திருநங்கை கல்லூரி மாணவிகளுக்கு மடி கணினி வழங்கும் விழா நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்சியில், ரோட்டரி மாவட்ட துணை ஆளு நர் நாகராஜ், சங்க செயலாளர் செந்தில்பாபு, பொருளாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டயச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத் தார். திருநங்கைகள் உரிமையியல் ஆர்வலரும், எழுத்தாள ருமான கல்கி சுப்பிரமணி, “”பகிர்ந்து மகிழ், சேர்த்துமகிழ்’’ என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். நிறைவாக, ரோட் டரி சங்க புதிய உறுப்பினர்களாக, திருநங்கைகள் இணைக் கப்பட்டனர். மேலும் தொடர்ந்து திருநங்கைகள் மேம்பாட் டிற்கு ரோட்டரி சங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரி விக்கப்பட்டது.