மேட்டுப்பாளையம், அக்.18- மேட்டுப்பாளையம் - உதகை ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவால் மலை ரயில் போக்கு வரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி இயக்கப்பட்டு வருகிறது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இந்த மலை ரயில் பயணம் பெரிதும் கவரும். இம்மலை ரயில் பாதையில் மழை காலங்களில் அடிக்கடி மண் சரிவு ஏற்படும். புதனன்று அதிகாலையில் பெய்த கனமழையால் அடர்லி மற்றும் ஹில்குரோவ் ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவா ளத்தில் பாறைகளும், மரங்களும் சாய்ந்தன. இதனால் புதனன்று மேட்டுப் பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு சுமார் 150 சற்றுலா பயணிகளு டன் புறப்பட்ட மலை ரயில் மேற் கொண்டு பயணிக்க வழியின்றி நடு வழியில் நிறுத்தப்பட்டது. சீரமைப்பு பணிகள் தாமதமாகும் என்பதால் ரயில் சேவை ரத்து செய் யப்பட்டு, மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத் திற்கு திருப்பி அனுப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து, ரயிலில் இருந்த பயணிகளை பேருந்து மூலம் உதகை சென்றனர். மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் இருபதுக் கும் மேற்பட்ட பணியாளர்கள் சென்று சீரமைப்பு பணிகளை மேற் கொண்டனர். இருப்பு பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகள் சீர் செய் யப்பட்டு, வழக்கம் போல் மலை ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப் படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.