districts

img

கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பாராட்டு

சேலம், பிப்.10- சேலம் மாவட்ட அளவிலான கலைத்திரு விழா போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தாதேவி பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை சார்பில், சேலம் மாவட்ட அளவிலன கலைத்திருவிழா போட் டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கான பரிசளிப்பு விழா பத்மவானி கலை  மற்றும் அறிவியல் கல்லூரியில் சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து  கொண்ட மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி, வெற்றி பெற்றோருக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகை யில், மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாக பள்ளி, வட்டா ரம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. கல்வி பயிலும் காலகட்டகளிலேயே தங்களின்  தனித்திறன்களை ஒவ்வொரு மாணவர்க ளும், மாணவியர்களும் வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசால் இத்தகைய கலைத்திருவிழாகள் நடத்தப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் 1,50,791 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் முதல் இடம் பெற்ற 458 மாணவர் கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று 63 மாணவர்கள் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.  இது தவிர மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்க ளில் வெற்றி பெற்ற 180 பள்ளிகளைச் சார்ந்த  1,306 மாணவ, மாணவிகளுக்கு இந்நிகழ்வில் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன, என்றார். இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணை இயக்குநர் வை.குமார், முதன்மை கல்வி அலுவலர் மு.கபீர், கல்லூரி தாளாளர் ஏ.சத்தியமூர்த்தி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் மோகன், கோபாலப்பா, சந் தோஷ், ராஜூ மற்றும் தொடக்கக்கல்வி உதவி திட்ட அலுவலர்கள் பத்மநாபன், பிரபு ஆகி யோர் கலந்து கொண்டனர்.