பள்ளி கல்வித்துறை சார்பில், கன்னியாகுமரியில் நடைபெற்ற மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டியில், சேலத்தைச் சேர்ந்த ஹோலி ஏஞ்சலஸ் பள்ளி மாணவிகள் 14 வயதுக்குட்பட்டோருக்கான கடற்கரை கைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்றனர். அவர்களுக்கு பள்ளி முதல்வர் ஷெர்லி செபாஸ்டியன், பயிற்சியாளர் ராஜா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.