தருமபுரி, ஆக.23- பாரா டேக்வாண்டோ தேசிய சாம்பியன்சிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் அமுதனை, மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பாராட்டு தெரிவித்தார். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஆக.12ஆம் முதல் 14ஆம் தேதி வரை நடைபெற்ற பாரா டேக்வாண்டோ தேசிய சாம்பி யன்சிப் போட்டி நடைபெற்றன. இதில் குருகி மற்றும் பூம்சே பிரிவில் தருமபுரி பாவட்டம் பூதநத்தம் கிராமத்தை சேர்ந்த அமுதன் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும், டிசம்பர் 2023ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடை பெறும் உலக பாரா டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொள்ளவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, அமுதனை நேரில் அழைத்து வாழ்த்தும், பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளை ஞர் நலன் அலுவலர் தே.சாந்தி, டேக்வாண்டோ அசோசி யேசன் துணைத்தலைவர் பி.சாக்ரடீஸ் மற்றும் பயிற்சி யாளர் ராஜாகிரி ஆகியோர் உடனிருந்தனர்.