districts

img

விளையாட்டில் சாதனை: கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு

தருமபுரி, செப்.4- விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த தரும புரி அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாண விகளுக்கு கல்லூரி முதல்வர் பாராட்டு தெரிவித்துள் ளார். தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் பல்வேறு தடகள மற்றும் குழு விளை யாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத் துள்ளனர். மேலும், அகில இந்திய பல்கலைக்கழகங்க ளுக்கு இடையிலான ஆடவர் ஹேண்ட்பால் போட்டி களில் சேலம் பெரியார் பல்கலைக்கழக அணிக்காக விளையாடி, இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்ற  கணிதத்துறை மாணவன் எஸ்.சஞ்சய்-க்கு, பெரியார் பல் கலைக்கழக உடற்கல்வித்துறையால் வழங்கப்பட்ட சான் றிதழை புதனன்று வழங்கி கல்லூரி முதல்வர் கண்ணன் பாராட்டு தெரிவித்தார். இதேபோன்று, பெரியார் பல் கலைக்கழக ஆளுகைக்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர் மற்றும் மகளிர் சதுரங்க போட்டி களில், தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவி கவிய ரசி மூன்றாம் இடத்தையும், மாணவர் பிரிவில் சத்யன் ஆறாம் இடத்தையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர்களுக்கு பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட தகுதி சான்றிதழ் மற்றும் கோப்பை களை கல்லூரி முதல்வர் வழங்கி கௌரவித்தார். தருமபுரி மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் நடை பெற்ற, தடகள போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் பயிலும் என்.ஜீவிதா, ஷாலினி, ஓவியா ஆகியோருக்கு தகுதி சான்றிதழ், பதக்கம், கோப்பைகளை கல்லூரி  முதல்வர் கண்ணன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் கல்லூரியில் உடற்கல்வி இயக்குநர் கு.பாலமுருகன், பேராசிரியர்கள் விஜயா, தாமோதரன், சாரதி, பிரபாகரன், ஆர்.கிருபாகரன், அரங்கநாயகி, பிர சன்னா வெங்கடேசன், அசோக் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.