districts

img

தடுமாறும் பாஜக: வலுவான நிலையில் ‘இந்தியா’ கூட்டணி

நாமக்கல், ஏப்.9- தேசிய அளவில் இந்தியா கூட்டணி வலு வான நிலையில் உள்ளதென கொங்குநாடு  தேசிய மக்கள் கட்சியின் பொதுச்செயலா ளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக அவர் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடு முழு வதும் இந்தியா கூட்டணி வெற்றிக்காக பல  முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மகாராஷ் டிரா, தில்லி, உத்தரப்பிரதேசம், பீகார், மத்தி யபிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் உள்பட நாடு முழுவதும் இந்தியா கூட் டணி சிறப்பாக அமைந்துள்ளது. காங்கி ரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சமூகநீதி,  சமூக நலன் சார்ந்து உள்ளது. தமிழகத் தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக் கப்பட்டதை போல, தேசிய அளவில் காங்கி ரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த  தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையை கண்டு அதிமுகவினர் அமைதியிழந்தனர். அதைப்போல, இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வந்தவுடன் அவற்றை செயல்படுத்துவதற்கான சாத்தி யமில்லை எனக்கூறி பாஜக எதிர்கருத் துக்களை தெரிவிக்கிறது. கர்நாடகாவிலும் மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. எனவே, இந்திய அளவில் கொடுக் கின்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறை வேற்றும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பாஜகவை பொறுத்தவரை, தமிழ்நாட் டில் தோற்றாலும் ஆட்சி அமைப்போம் என்ற  நம்பிக்கையில் பெரிய நிறுவனங்களை, தொழிலதிபர்களை மிரட்டி வருகின்றனர்.  ஆனால், இந்தியா கூட்டணிதான் ஆட்சி  அமைக்கும். தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சர்கள் உருவாவதற்கு வாய்ப்பு உள் ளது.  அண்ணாமலையை பொருத்தவரை, வெற்று வாக்குறுதிகளை கூறுகிறார். மத்தி யில் பாஜக ஆட்சி இருந்த போதிலும் தமிழ கத்திற்கு எதுவும் செய்யவில்லை. எந்த திட் டங்களையும் செயல்படுத்தாமல் தற்போது தேர்தலை முன்னிட்டு வாக்குறுதிகளை வழங் குகிறார்கள். கோவையில் தற்போது தேர் தல் கள நிலவரம் வேறு மாதிரியாக உள்ள போதிலும், பாஜகவினர் தங்களுக்கு சாத கமாக கூறுகின்றனர். எடப்பாடியின் தன்னிச் சையான செயல்பாடுகளால் அதிமுகவின் தீவிர தொண்டர்கள் உதயசூரியனுக்கு வாக் களிக்க தயாராகிவிட்டார்கள். அதிமுகவின் தொண்டர்கள் விரும்பாத காரணமாகத்தான் பாஜக கூட்டணியிலிருந்து இபிஎஸ் வெளியேறினார் என்று கட்சியினர்  கூறுகின்றனர். தேர்தலுக்குப் பிறகு பாஜ கவை அதிமுக ஆதரிக்கும் என்ற நிலைப் பாடு உள்ளதால், அதிமுக தொண்டர்கள் கேள்வி கேட்கிறார்கள். தமிழக நலன் கருதி  தேர்தலில் ஒற்றுமையாக, மோடிக்கு எதி ராக இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். நாடு முழுவதும் இந்தியா கூட்டணி  வலுவாக உள்ளது  என்றார். முன்னதாக, செய்தியாளர் சந்திப்பின்போது, ஏ.கே.பி. சின்ராஜ் எம்.பி., கொமதேக நிர்வாகிகள் துரை, ரவிச்சந்திரன், அருள்மணி ஆகி யோர் உடனிருந்தனர்.