சேலம், ஏப்.2- சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாவாந்தெரு பகுதியில், சேலம் மக்களவை தொகுதி திமுக வேட்பா ளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து, ஜக்கம்மா குறி சொல்லும் கோடாங்கி குடுகு டுப்பை அடித்தவாறு வாக்குசேகரித்தார். அப் போது, அதிமுகவுக்கு போடும் ஓட்டு, பாஜக விற்கு போடும் ஓட்டாகும். நாட்டை பாதுகாக்க நினைப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாட்டை அழிக்க நினைப்பது எடப்பாடி பழனிச் சாமி, பிரதமர் மோடி. ஜிஎஸ்டி வரி கொண்டு வந்ததற்கு ஆதரவாக செயல்பட்டவர் எடப் பாடி பழனிச்சாமி. குட்கா, மணல் ஆகியவற் றில் கொள்ளையடித்தவர் எடப்பாடி பழனிச் சாமி என, ஜக்கம்மா வாக்குக்கூறி திமுகவுக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இதில் எடப்பாடி நகர்மன்ற தலைவர் டி.எஸ். எம்.பாஷா, திமுக நகர துணைச்செயலாளர் வடிவேலு, வார்டு உறுப்பனிர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.