கோவை, ஜூலை 25- கொடநாடு கொலை, கொள்ளை வழக் கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள கேரளாவை சேர்ந்த தீபு மற்றும் உதயகுமார் ஆகிய இரு வர் புதனன்று கோவை சிபிசிஐடி அலுவ லகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக நீலகிரி மாவட்ட காவல் துறை வழக்கு பதிவு செய்து நடத்தி வந்த விசாரணை யில் முக்கிய குற்றவாளியாக பதிவு செய் யப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரி ழந்தார். இதையடுத்து இவ்வழக்கின் விசா ரணை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக் கப்பட்டது. இந்த வழக்கில் சயன், வாளை யார் மனோஜ் உள்ளிட்ட 12 பேர் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். சிபிசிஐடி போலீஸார் இதுவரை 300 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ள ர். இந்நிலையில், இந்த வழக்கில் விசார ணைக்கு நேரில் ஆஜராகுமாறு வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள உதயகுமார் மற் றும் தீபு ஆகியோர் ஜூலை 25 ஆம் தேதியும், ஜம்ஷீர் அலி மற்றும் ஜித்தின் ஜாய் ஆகி யோர் ஜூலை 30 ஆம் தேதியும் கோவை சிபிசி ஐடி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் 4 ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தீபு மற் றும் 7 ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ள உதயகுமார் ஆகிய இருவருக்கு சம் மன் அனுப்பப்பட்ட நிலையில், புதனன்று இரு வரும் விசாரணைக்காக ஆஜராகினர். அவர் களை கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதா னத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் கூடு தல் கண்காணிப்பாளர் முருகவேல் தலைமை யிலான காவல் துறையினர், விசாரணை மேற் கொண்டனர்.