districts

கொடநாடு வழக்கு: ஜூலை 28க்கு ஒத்திவைப்பு

உதகை, ஜூன் 23- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூலை 28 ஆம் ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பக தூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் சயான், வாளையாறு மனோஜ், சந் தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடை பெற்று வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கொடநாடு வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்து உள் ளது.  இந்த வழக்கை பொறுத்தவரை 316 பேரிடம் மறுவிசா ரணை நடத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட, 10 பேர் தவிர, வாகன விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபால், உற வினர் ரமேஷ், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், சசி கலா, ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக், முன் னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி உட்பட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், கொடநாடு வழக்கு விசா ரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையே கோவை சிபிசிஐடி கூடுதல் எஸ்பி முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை வெள்ளியன்று உதகை ஒருங் கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினார். சிபிசிஐடி தரப்பில் கூடுதல் எஸ்பி  முருகவேல், டிஎஸ்பிக்கள் சந்திரசேகர்,

அண்ணாதுரை உள் ளிட்ட போலீசார் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்ட சயான்,  வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகியோர் ஆஜராகினர். இதற்கிடையே, சிபிசிஐடி போலீசாரின் இடைக் கால விசாரணை அறிக்கையை ஏன் தாக்கல் செய்யவில்லை என மாவட்ட நீதிபதி அப்துல் காதர் கேள்வி எழுப்பினார்.  இதையடுத்து அடுத்த மாதம் விசாரணை அறிக்கை தாக் கல் செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற் றம் சாட்டப்பட்ட தரப்பு வழக்கறிஞர் விஜயன், கொடநாடு கொலை சம்பவம் நடந்த இடத்தில் மீண்டும் ஆய்வு செய்ய  வேண்டும் என்று வாதிட்டார். ஆனால் அவரது கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல் வாளையார் மனோஜ் குடும்பத்தினர் விசாரணை என்ற பெயரில் துன்பு றுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட தரப்பு வழக்கறிஞர் முனியசாமி வாதிட்டார். அப்போது இதுவரை குற்றம் சாட்டப் பட்ட குடும்பத்தினர் துன்புறுத்தப்படவில்லை என்றும், இனி மேலும் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முடிவில் சாட்சிகள் சம்பந்தமாக புலன் விசாரணை மேற் கொள்ள வெளி மாநிலம் செல்லவும் தொழில்நுட்ப விஷயங்க ளுக்காகவும் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து  கோரிக்கையை ஏற்று வழக்கை ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார்.