சேலம், நவ.14- பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என சேலம் அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம், பெத்தநாயக் கன்பாளையம் பேரூராட்சி அலுவல கத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நக ராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு தலைமையில், மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் முன்னிலை யில் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், சேலம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற் கொள்ளப்பட்டுவரும் சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி உள் ளிட்ட அடிப்படை வசதிகளும், பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட திட்டப் பணிகளின் செயல் பாடுகள் மற்றும் தற்பொழுது நடை பெற்றுவரும் புதிய திட்டப்பணிகள் குறித்து தொடர் ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையொட்டி மேற்கொள்ளப் பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து தொடர்புடைய அலுவலர் களிடம் அமைச்சர் கேட்டறிந்தார். குறிப்பாக, பெத்தநாயக்கன்பாளை யம் பேரூராட்சியில் ஆத்தூர் - நகர சிங்கபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் மற் றும் உள்ளூர் நீர் ஆதாரம் மூலம் 1.552 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப் பட்டு தற்போது நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 76 லிட்டர் தினசரி குடி நீர் விநியோகம் செய்யப்பட்டு வரு கிறது. பொதுமக்களுக்கு பாதுகாக் கப்பட்ட சீரான குடிநீர் வழங்கப்படு வதை அலுவலர்கள் தொடர்ந்து உறுதி செய்திட வேண்டுமென கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. மேலும், தெருவிளக்கு, குப்பை களை சேகரித்து தரம் பிரித்தல் என பெத்தநாயக்கன்பாளையம் பேரூ ராட்சியில் நடைபெற்றுவரும் பல் வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. அத்துடன், பொது மக்களின் அடிப்படை தேவைக ளுக்கு முக்கியத்துவம் அளித்து உட னுக்குடன் பணிகளை செய்து முடிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அதி காரிகளுக்கு அறிவுறுத்தினார். முன் னதாக, இக்கூட்டத்தில் காவல் கண் காணிப்பாளர் ஏ.கே.அருண் கபிலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர் மேல்மங்கை, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதிஸ்ரீ, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை அதிகாரி கள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.