ஈரோடு, பிப்.20- ஈரோடு. வெண்டிபாளையத்தில் பாலர் பூங்கா கிளை அமைக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வெண்டிபாளையத்தில் நடைபெற்ற பாலர் பூங்கா கூட்டத்திற்கு அமைப்பாளர் ஆர். அச்சுதன் தலைமை ஏற்றார். இக்கூட்டத்தில், தலைவராக ஆர். அச்சுதன், துணைத் தலைவராக கே.சாய் மற்றும் தரன், செய லாளராக எம்.ஸ்டீபன், துணைச் செயலாளராக எம்.யாகவி, ஆர்.சூர்யா (எ) பிரேம்குமார் மற்றும் செயற்குழு உறுப்பி னர்களாக 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் பி.ராஜா, பாலர் பூங்கா தாலுகா அமைப்பாளர் என்.பால சுப்பிரமணி ஆகியோர் பாலர் பூங்காவின் நோக்கங்கள் குறித்து உரையாற்றினர். முடிவில், யு.விஷ்ணு நன்றி கூறி னார்.