ஈரோடு, செப்.10- சென்னிமலை அருகே வயதான தம்ப தியை கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த முருங்கதொழுவு ஊராட்சிக்குட் பட்ட ஒட்டன்குட்டை அருகே உள்ள கரியங் காட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து சாமி (85). இவரது மனைவி சாமியாத்தாள் (80). இவர்களுக்கு வசந்தி, கவிதா, கலை யரசி என திருமணமான 3 மகள்கள் உள்ள னர். அனைவரும் தனியாக வசித்து வருகின் றனர். முத்துசாமியும், சாமியாத்தாளும் தோட் டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், வெள்ளியன்று இரவு முத்து சாமியும், சாமியாத்தாளும் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கினர். அப் போது நள்ளிரவில் முத்துசாமியின் வீட்டிறு குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் கள், தூங்கி கொண்டிருந்த முத்துசாமியை இரும்பு கம்பியால் தாக்கியும், அரிவாளால் வெட்டினர். சத்தம் கேட்டு எழுந்த சாமியாத் தாளையும் இரும்பு கம்பி மற்றும் அரிவா ளால் வெட்டியுள்ளனர். இதில் முத்துசாமி யும், சாமியாத்தாளும் ரத்த வெள்ளத்தில் சம் பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில், முத்துசாமி மகள் கலையர சியின் மகனான அஜித் (23), தாத்தா, பாட் டியை பார்ப்பதற்காக சனியன்று காலை வீட் டிற்கு வந்தபோது, ரத்த வெள்ளத்தில் தாத்தா வும், பாட்டியும் கொலை செய்யப்பட்டிருப் பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகு றித்து தகவலறிந்த துணை காவல் கண்கா ணிப்பாளர் ஜெயபாலு,
சென்னிமலை காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்து சாமி, சாமியாத்தாள் உடலை மீட்டு, பிரேத பரி சோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டில் ஆய்வு செய்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 16 பவுன் நகை, 60 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலை சம்பவம் நடந்த வீட்டில் பதிவான அடையாளம் தெரியாத நபர் களின் கைரேகைகள், அவர்கள் விட்டு சென்ற தடயங்களை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் நகை, பணத் திற்காக இந்த கொலை மற்றும் கொள்ளை நடந்தது தெரியவந்தது. கொலையாளி களை பிடிக்கும் துணை காவல் கண்காணிப் பாளர் ஜெயபால் தலைமையில் ஆய்வாளர் கள், உதவி ஆய்வாளர்கள் கொண்ட 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சம்ப வத்தால் சென்னிமலை பகுதியில் தனியாக வசிக்கும் வயதானவர்கள் அச்சத்தில் உறைந் துள்ளனர். எனவே, இந்த பகுதியில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று, சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்து விட்டு, வீட்டிலிருந்த நகை, பணம் ஆகிய வற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத் தக்கது.