கோவை, அக். 9 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் களில் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.சி.கருணாகர னின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டது. கட்சியின் கோவை மாவட் டக்குழு அலுவலகத்தில் நடை பெற்ற நினைவேந்தல் கூட்டத்திற்கு கட்சி யின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் தலைமை வகித்தார். இதில், கட்சியின் மூத்த தோழரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பி னருமான யு.கே.வெள்ளிங்கிரி, மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாந கராட்சி மாமன்ற உறுப்பினர் வி.இராம மூர்த்தி, கிழக்கு நகரக்குழு செயலாளர் என். செல்வராஜ் மற்றும் கே.சி.கருணாகரன்-னின் குடும்பத்தார் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்று நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.