கோவை, செப்.30- பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவியில் தீடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால்,சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் இயற்கை எழில் சார்ந்த மனதை கொள்ளை கொள்ளும் ரம்யமாக காட்சியளிக்கும் பகுதியாகும். இங்கு விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வரு வதும் வழக்கம். இந்நிலையில் பள்ளிகள் விடுமுறை தினம் என்பதால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆழி யார் கவியருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஆழியார், ஆழியார் அணை பூங்கா, கவி அருவி உள்ளிட்ட இடங்களுக்கு படையெ டுத்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்ததன் காரண மாக கவி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வனத்துறையினர் கவியருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பினர்.