districts

img

காசிபாளையம் பேரூராட்சி மன்ற கூட்டம்

கோபிசெட்டிபாளையம், அக்.26- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சி மன்ற கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், காசிபாளையம் பேரூராட்சி மாதாந்திர  கூட்டம் தலைவர் தமிழ்செல்வி தலைமையில், செயல் அலு வலர் மணிகண்டன் முன்னிலையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில், வார்டு பகுதியில் குடிநீர், சாக்கடை உள்ளிட்ட  சுகாதாரப் பணிகள் மேற்கொள்வதில்லை என குற்றச்சாட்டு களை முன்வைத்தனர். இதைத்தொடர்ந்து பேரூராட்சி மன்றத்  தலைவர் தமிழ்செல்வி பேசுகையில், அனைத்து வார்டு களிலும் கழிவுநீர் கால்வாய், சுகாதார வசதிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித் தார்.