districts

img

3 தலைமுறை உறவு...

அவிநாசி, ஏப்.9-  அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் என ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.  தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியா ளர் சங்கத்தின் அவிநாசி ஒன்றிய ஐந்தாவது மாநாடு  தனியார் திருமண மண்டபத்தில் சனியன்று நடைபெற்றது. இம்மாநாட்டை மாவட்ட இணைச்செயலாளர் தனலட்சுமி துவக்கி வைத்து பேசினார். வட்டாரச் செயலாளர் இந்தி ராணி, மல்லிகா மற்றும் சிஐடியு ஈஸ்வரமூர்த்தி ஆகியோர்  வாழ்த்திப் பேசினர். இதனைத் தொடர்ந்து மாநாட்டில் புதிய  தலைவராக வளர்மதி, செயலாளராக இந்திராணி, பொரு ளாளராக மல்லிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  முன்னதாக, இம்மாநாட்டில் அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். அங் கன்வாடி பணியாளரை அரசு ஊழியராக அறிவித்திட வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங் கிட வேண்டும். உணவு மானியத்தை விலைவாசி உயர் விற்கு ஏற்ப வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.