மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.சி. கருணாகரனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சிபிஎம் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.