districts

img

திருப்பூர் மாவட்டம், சாமுண்டி நகர் பகுதியை சேர்ந்த இருதய லட்சுமி

திருப்பூர் மாவட்டம், சாமுண்டி நகர் பகுதியை சேர்ந்த இருதய லட்சுமி (28) மூளை காச நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரின் மருத்துவ உதவிக்கான நிதியை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் அளிக்க முன்வந்தனர். இதற்காக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று வழங்கினார். இந்நிகழ்வில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.