வெண்மணி தியாகிகள் தினத்தை முன்னிட்டு திங்களன்று பல்லடம் தாலுகா காளிவேலம்பட்டி பகுதியில் நீண்ட நாட்களாக புதர் மண்டிக் கிடந்த சமுதாய நலக்கூடத்தை தூய்மைப்படுத்த இந்திய மாணவர் சங்கத்தினர் உழைப்பு தானம் செய்தனர். மாணவர் சங்க பல்லடம் துணைச் செயலாளர் விமல் தலைமையில் நடைபெற்ற தூய்மை பணியில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.