தருமபுரி, ஜூன் 26- வாசிப்பு பழக்கம் மட்டும் தான் நல்ல மனிதர்களை உருவாக்கும் என தருமபுரி புத்தக திருவிழாவில் மருத்துவர் கு.சிவரா மன் உரையாற்றினார். தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத் தக பேரவை, பாரதி புத்தகாலயம் சார்பில் தருமபுரி அரசு கலைகல்லூரியில் புத்தக திருவிழா கடந்த வெள்ளியன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த புத்தக திரு விழா ஜூன் 24 முதல் ஜுலை 4 வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. புத்தக திரு விழாவையொட்டி நாள்தோறும் கருத்த ரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக சனியன்று நடை பெற்ற கருத்தரங்கத்திற்கு தகடூர் புத்தக பேரவை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் தங்கமணி தலைமை தாங்கினார். ஒரே பூமி, ஒரே வாழ்வு, ஒற்றை நலம் என்ற தலைப்பில் மருத்துவர் கு.சிவராமன் பேசுகையில், வாசிப்பு பழக்கம் மட்டும் தான் நல்ல மனி தர்களை உருவாக்கும். எவன் ஒருவன் புத் தகத்தின் முன் தலைகுனிகிறானோ அவன் தான் தலை நிமிர்ந்து வாழமுடியும். தகடூர் புத்தக பேரவை பல எழுத்தாளர்களை உரு வாக்கி இருக்கிறது. புத்தக வாசிப்பை அதி கப்படுத்தி தமிழகத்தின் முன்னணி மாவட் டமாக தருமபுரி திகழ்கிறது. கொரோனா காலம் மக்களுக்கு புதிய புரிதலை ஏற் படுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் மனிதனின் உடலும், உள்ளமும் நலமாக இருப்பது மட்டுமே நலம் அல்ல என்றும், உல கத்தில் மண்புழு, பறவைகள், மரங்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் நல மாக இருக்க வேண்டும் என கூறியுள்ளது. இவையெல்லாம் நலமாக இருந்தால் தான் நாமும் நலமாக இருக்க முடியும். ஒற்றை நலம் என்பது இந்த புவியில் இருக்கக்கூடிய அனைத்தும் நலமாக இருக்க வேண்டும், என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மனோகரன், ஆசிரியர் கள் ப.அறிவொளி, ஐ.கே.முருகன், நெடுஞ் சாலைத்துறை கோட்ட பொறியாளர் என். ஆர்.தனசேகரன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.