districts

img

சிபிஎம் சேலம் கிழக்கு மாநகரச் செயலாளராக கே.பச்சமுத்து தேர்வு

சேலம், நவ.3- மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் கிழக்கு மாநகரச் செய லாளராக கே.பச்சமுத்து தேர்வு  செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் கிழக்கு மாந கர 8 ஆவது மாநாடு, தென்றல் திருமண மண்டபத்தில், தோழர் கந்தசாமி நினைவரங்கத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. மாநகரக்குழு உறுப்பி னர் ஜி.சுல்தான் செங்கொடியை ஏற்றி வைத் தார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்டக்குழு உறுப்பினர் வி.பெரியசாமி வாசித்தார். மாந கரக்குழு உறுப்பினர் பி.ரமணி வரவேற் றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஞான சௌந்தரி துவக்கவுரையாற்றினார். கிழக்கு  மாநகரச் செயலாளர் பொன்.ரமணி அறிக்கையை முன்வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.பன்னீர்செல்வம், ஆர்.வைரமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், சேலம் பழைய பேருந்து நிலையம் இரண்டடுக்கு பேருந்து நிலைய மாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் மேலடுக்கினை பொதுமக்கள் மற்றும் பேருந்து  பயணிகள் பயன்படுத்த முடி யாத சூழல் தொடர்ந்து ஏற்பட் டுள்ளது. கீழே உள்ள பேருந்து நிலையத்தை பயன்படுத்து வதைப் போல, மேலே உள்ள பேருந்து நிலையத்தையும் பொதுமக்கள் பயன்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். சேலம் சீலநா யக்கன்பட்டி மற்றும் அம்மாபேட்டை பகுதி யில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரி சலை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் சேலம்  கிழக்கு மாநகரச் செயலாளராக கே.பச்ச முத்து மற்றும் 13 மாநகரக்குழு உறுப்பினர் கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி நிறைவுரை யாற்றினார். முடிவில், மாநகரக்குழு உறுப்பி னர் எம்.ராஜேஷ் நன்றி கூறினார்.