தருமபுரி, அக்.27- மார்க்சிஸ்ட் கட்சியின் தரும புரி ஒன்றியச் செயலாளராக கே. கோவிந்தசாமி தேர்வு செய்யப் பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் தருமபுரி ஒன்றிய 24 ஆவது மாநாடு, தருமபுரி பூபதி திருமண மண்டபத்தில், தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவரங் கத்தில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப் பினர் கே.பூபதி, ஒன்றியக்குழு உறுப்பினர் கள் கே.கோவிந்தசாமி பி.ரவி ஆகியோர் தலைமை வகித்தனர். முதுபெரும் தோழர் எம்.பெருமாள் செங்கொடியை ஏற்றி வைத் தார். ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.மீனாட்சி வரவேற்றார். மாவட்டக்குழு உறுப்பினர் எம். அருள் குமார் அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன் துவக்கவுரையாற்றினார். ஒன்றியச் செயலா ளர் என்.கந்தசாமி அறிக்கையை முன்வைத் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். முத்து வாழ்த்திப் பேசினார். இம்மாநாட் டில், காவேரி உபரிநீரை தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்ப வேண்டும். குள் ளனூர், பனந்தோப்பு ஒட்டி யுள்ள 4 ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி, நீர் நிலை களை பாதுகாக்க வேண்டும். வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலம் பணியை உடனடி யாக துவங்க வேண்டும். சனத் குமார் நதியில் கழிவுநீர், சாயப் பட்டறை நீர் கலந்து மாசுபடு வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பச்சனம்பட்டி பேருந்து நிறுத்தத் தில் நிழற்கூடம் அமைக்க வேண்டுத்ம. நீண்ட காலம் புறம்போக்கில் குடியிருப்போருக்கு மனைபட்டாவும், அனுபவ நிலத்திற்கு நிலப் பட்டாவும் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து கட்சியின் தருமபுரி ஒன்றியச் செயலாளராக கே.கோந்தசாமி உள்ளிட்ட 11 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து நிறைவுரை யாற்றினார். ஒன்றியக்குழு உறுப்பினர் எம். பழனி நன்றி கூறினார்.