districts

img

மேற்கு மண்டல ஐஜியாக கே.பவானீஸ்வரி பொறுப்பேற்பு

கோவை, ஆக.9- மேற்கு மண்டல காவல் துறை தலை வராக கே.பவானீஸ்வரி செவ்வாயன்று கோவை, பந்தையசாலை பகுதியி லுள்ள அலுவலகத்தில் பொறுப்பேற் றுக் கொண்டார். கோவையை தலைமையிடமாக கொண்ட மேற்கு மண்டல காவல் துறை தலைவர் அலுவலகம் கோவை, பந் தையசாலையில் உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கு மண் டல காவல் துறை தலைவராக சுதா கர் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். அவர் சென்னை பெருநகர போக்கு வரத்து இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதன்பின் மேற்கு மண்டல காவல் துறை தலைவ ராக கே.பவானீஸ்வரி நியமிக்கப்பட் டார். 2002 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர் வான பவானீஸ்வரி, சிபிசிஐடி பிரிவு, கன் னியாகுமரி மாவட்ட மற்றும் கியூ பிராஞ்ச் பிரிவு ஆகியவற்றில் காவல் கண்கா ணிப்பாளராகவும், சென்னை கீழ்ப்பாக் கத்தில் துணை ஆணையராகவும், மெட் ரோவில் பாதுகாப்பு அதிகாரியாகவும், சென்னையில் போக்குவரத்து இணை ஆணையராகவும் பணியாற்றினார். இதன் பின் திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவராக பணியாற்றிய இவர், பதவி உயர்வு பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை யில் காவல் துறை தலைவராக பணி யாற்றினார். இந்நிலையில், கே.பவானீஸ்வரி செவ்வாயன்று மேற்கு மண்டல காவல் துறை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை மேற்கு மண்ட லத்துக்குட்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள், அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரி வித்தனர்.