ஆசிய வலுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கமும், ரோமானிய நாட்டில் நடைபெற்ற ஜூனியர் உலக வலுதூக்கும் போட்டியில் வெண்கல பதக்கமும் வென்ற தினேஷ்குமார் மற்றும் ஆசிய வலு தூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கமும் பெற்ற இலக்கியா ஆகிய இருவரும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர். மேன்மேலும் சாதனை குவித்து நாட்டிற்கு பெருமை தேடித்தர வேண்டும் என்கிற நம்பிக்கையை பி.ஆர்.நடராஜன் எம்பி.,அவர்களிடம் தெரிவித்தார். இவர்கள் இருவரும் கோவை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.