districts

img

ஜூனியர் மினி மாரத்தான்

நாமக்கல், ஜூலை 7- இளைய தலைமுறையினர் செல்போனில் கவனத்தை செலுத்துவதை தவிர்க்க ஜூனியர் மினி மாரத்தான் போட்டி தனியார் அமைப்பு சார்பில் ஞாயிறன்று நடை பெற்றது.  நாமக்கல் மாவட்டம், குமராபாளையத்தில் இளைய தலைமுறையினர் செல்போனில் கவனத்தை செலுத்து வதை தவிர்த்து, விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குழந்தைகள், பெற் றோர்கள் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்காக ஜூனியர் மினி மாரத்தான் போட்டி தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்றது. இதில் 7 வயது முதல் 15 வயது வரை என 900க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சிறுமிகள் ஆர்வமுடன் இந்த போட்டியில் பங்கேற்றனர். மாரத்தான் போட்டி ஆனங்கூர் பிரிவில் தொடங்கி கத்தேரி,காந்தி சிலை என 5 கி.மீ தூரம் வரை சென்று மீண்டும் ஆனங்கூர் பிரிவில் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குமார பாளையம் நகர்மன்றத் தலைவர் விஜய் கண்ணன் கலந்து கொண்டு மாரத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜூனியர் மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற  மாணவர்்களுக்கு குமாரபாளையம் நகர மன்றத் தலை வர் விஜயகண்ணன் சிறுவர் சிறுமியருக்கு பதக்கம், சான் றிதழ்,பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார்.  இந்த நிகழ்வில்  சமூகஆர்வலர்கள் பல்வேறு விளையாட்டு  துறைகளை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர், திரளாக கலந்து கொண்டனர்.