ஈரோடு, ஜுன் 22- உள்நாட்டு மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமைக்கு ஆதரவான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, உறுதுணையாக இருந்த வர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் அந்தியூரில் வியாழனன்று நடைபெற்றது. பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் உள்ள உள்நாட்டு நீர் நிலை களான ஆறு, ஏரி, குளங்கள் மற்றும் அணைகளில் மீன் பிடிக்கும் உரிமையை தனியாருக்கு வழங்கக் கூடாது. அரசாணை எண் 332-ன் படி முன்னுரிமை அடிப்படையில் மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும். ஆனால், 2020 ஆம் ஆண்டு முதல் பொது ஏலம் மூலம் தனியாருக்கு தாரைவார்க்கும் மீன் ்வளத்துறை மற்றும் பொதுப்பணி துறையின் முயற்சிக்கு எதிராக ஈரோடு, கோவை மற்றும் திருப் பூரில் உள்ள மீனவர் கூட்டுறவு சங் கங்கள் ஒன்றிணைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக் கப்பட்டது. சென்னை மீன்வளத்துறை ஆணையரின் பொது ஏல நடைமுறை செயல்முறை கடிதத்திற்கு எதிரான இவ்வழக்கில், சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் தண்டபாணி புத னன்று தீர்ப்பளித்தார். உள்நாட்டு நீர் நிலைகளில் மீன் பிடிக்கும் உரி மையை அரசாணை எண் 332-ன் படி மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கே முன்னுரிமை அடிப்படையில் வழங் கிட வேண்டும். என்று, மீனவர் களின் வாழ்வாதாரத்தை காக்கும் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கினார். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 8 லட்சம் உள்நாட்டு மீனவ குடும்பங் களின் வாழ்வாதாரம் மீட்கப்பட் டுள்ளது. இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டு வழக்கிற்கு வலு சேர்த்த இன்னபிற மீனவ கூட் டுறவு சங்கங்களுக்கும், பல்வேறு அறிவுரைகள் வழங்கிய தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப் பிற்கும், வழக்கில் தன்னிகரற்று கள மாடிய வழக்கறிஞர்கள் செந்தில் நாதன் மற்றும் சண்முகசுந்தரம் ஆகி யோருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி களை மீனவர் அமைப்பினர் தெரிவித் துள்ளனர். அந்தியூர் பெஸ்தவர் மீனவர் கூட்டுறவு சங்க கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு, கூட்டமைப் பின் மண்டல துணை தலைவர் ஏ.கே. பழனிசாமி தலைமை வகித்தார். சட்ட மன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடா ஜலம், அந்தியூர் பேரூராட்சி தலை வர் பாண்டியம்மாள், மாதேஸ் வரன், துணைத் தலைவர் பழனிசாமி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் கீதா சேகர், சிபிஐ(எம்) ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனி சாமி, மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து உள்ளிட்டோருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரி விக்கப்பட்டது. அந்தியூர் பெசவர் மீனவர் கூட்டு றவு சங்க தலைவர் நடராஜ், பி. மேட்டுப்பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் பிரகாஷ், செம்படா பாளையம் கூட்டுறவு சங்க நிர்வாகி கள் அய்யம்பெருமாள், லோக நாதன், அந்தியூர் காந்திமதி, பிரகாஷ் மற்றும் ஏ.ஜி.கோபால், பவானிசாகர் மண்டல அனைத்து வகை உள்நாட்டு மீன்பிடி மற்றும் மீன் விற்பனை தொழி லாளர் சங்க கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.