கோவை, ஏப்.8- கோவை மாவட்டம், பீள மேட்டை அடுத்த நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் யுவ ராஜ். இவர் கடந்த மார்ச் 26 ஆம் தேதியன்று மாலை, தனது வீட்டை பூட்டி விட்டு ஈரோட்டிலுள்ள உறவினர் வீட் டிற்கு சென்றுள்ளார். இதன் பின், ஏப்.4 ஆம் தேதி இரவு வீடு திரும்பிய நிலையில், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள் ளார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்த பொழுது வீட் டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், பணம் கொள்ளை யடிக்கபட்டது தெரியவந் தது. மேலும், வீட்டில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட்டிருந்த நிலையில், தங் களை காவல் துறையினர் கண்டுபிடித்து விடுவார்களோ என்று, கண்காணிப்பு கேம ராக்களையும், அதன் ஹார்ட் டிஸ்குகளையும் கொள்ளை யர்கள் திருடிச் சென்றுள்ள னர். இதுகுறித்து யுவராஜ் பீள மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகா ரின் பேரில் பீளமேடு காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்ற னர்.