உடுமலை, ஜன.4- போலி ஆவணங்களால் பதியப் பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண் டும் என சென்னை பத்திரப்பதிவுத் துறைக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. உடுமலை அருகே அமராவதிநகர், ஆண்டியகவுண்டனூர், எலையமுத் தூர், கல்லாபுரம் கிராமங்களை உள்ள டக்கிய பகுதியில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பில், ஜம்புக்கல் மலை அமைந்துள் ளது. இங்கு, கடந்த 1971 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், சுற்றுப்புற கிராமங்க ளைச் சேர்ந்த, 350 நிலமற்ற ஏழை விவ சாயிகளுக்கு, தலா இரண்டு ஏக்கர் வரை நிலங்கள், பல்வேறு விதிமுறைகளுடன் ‘கண்டிசன் பட்டா ‘ வழங்கப்பட்டது. இதில் மரங்களை அழிக்கக்கூடாது, 3 அடி ஆழத்திற்கு கீழ், நிலத்தை தோண் டக்கூடாது, நீர்நிலைகளை அழிக்கக்கூ டாது, விற்பனை செய்யக்கூடாது உள் ளிட்ட விதிமுறைகள் இடம் பெற்றிருந் தது. இங்கு, பருவமழை காலத்தில், மானாவாரி விவசாயமும் நடைபெற்று வந்தது. கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால், விவசாயப் பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில், சட்டத்திற்கு புறம் பாக, விதிமுறைகளை மீறி, போலி ஆவ ணங்கள் மூலமாக, நிலபரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அர சுக்கு சொந்தமான பல ஆயிரக்கணக் கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய் யப்பட்டு, மலை அழிக்கப்பட்டது. பட்டா உரிமையாளர்களாக உள்ள விவசாயி களையும், அனுமதிக்காமல், வழித்தடத்தை அடைத்தும், மிரட்டி வரு வதும் தொடர்கிறது. ஜம்புக்கல் மலைத் தொடரையும், பசுமையும் காக்க வேண் டும் என கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் பல்வேறு போராட் டங்களை நடத்தி வருகின்றனர். உயிருடன் உரிமையாளர்களும், வாரிசுகளும் உள்ள நிலையில், 700 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள், வருவாய்த் துறை வழங்குவது போல, வாரிசு, நில உரிமை சான்று போலியாக தயாரிக் கப்பட்டு, போலியான நபர்களை கொண்டு மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு, வருவாய்த்துறை ஆவ ணங்களில் மாற்றம் செய்யப்பட்டு, ஜம் புக்கல் மலை ஆக்கிரமிக்கப்பட்டுள் ளது. கண்டிசன் பட்டாவில், விற்பனை செய்ய முடியாது, உரிமையாளர்கள், வாரிசுகள் விவசாயம் செய்யாவிட் டால், அரசு எடுத்துக்கொள்ளும் என்ற விதி உள்ளது. இதனையும் மீறி, போலி ஆவணங்கள் வாயிலாக, ஏழை விவசா யிகள் நில உரிமை பறிக்கப்பட்டுள்ள தோடு, அரசுக்கு சொந்தமான பல ஆயி ரம் ஏக்கர் நிலங்களும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, 200க்கும் மேற் பட்ட ஆவணங்களின் நகல்களை கடந்த வருடம் அக்டோபர் மாதம் உடுமலை கோட்டாட்சியரிடம் பாதிக்கப்பட்ட விவ சாயிகள் மனுவாக அளித்தனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி, போலி ஆவணங்கள் வாயிலாக ஆக்கிரமிக் கப்பட்டுள்ள அரசு, மற்றும் விவசாயி கள் நிலங்களை மீட்கவும், பத்திர பதிவு, வருவாய்த்துறை ஆவணங்கள் மாற் றத்தை ரத்து செய்யவும், மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் வருவாய்த் துறை, பதிவுத் துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதன டிப்படையில் அமராவதி நகரிலுள்ள ஆண்டியகவுண்டனுார் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நவம்பர் மாதம் விசாரணை நடைபெற்ற நிலை யில், எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில் தலைமை பதிவுத்துறை தலைவருக்கு போலி ஆவணங்கள் மூலம் பத்திரபதிவுகள் குறித்து விவசாயிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.