districts

img

பந்தயத்திற்கு தயாராகும் ரேக்ளா வண்டிகள்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை யையொட்டி ஜல்லிகட்டு மற்றும் ரேக்ளா பந்த யமாகும். இதில் ரேக்ளா வண்டிப் பந்தயம்   என்பது, திருவிழாக் காலங்களில் தமிழகத் தின் கிராமப்புரங்களில் நடைபெறும் காளை மாட்டுவண்டிப் பந்தயமாகும். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், கொங்கு நாட்டி லும் இந்த வகைப் பந்தயங்கள் நடைபெறு கின்றன. மதுரை மாவட்டத்தில் அவனியாபு ரம், தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகு ளம், ஒட்டப்பிடாரம், திருப்பூர் மாவட்டத்தில்  உடுமலைப்பேட்டை, கோவை மாவட்டத்தில்  பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் நடத்தப்படு கின்றன. பெரும்பாலும் இவ்வகை போட்டி களில் காளை மாடுகள் ஈடுபடுத்தப்படு கின்றன. நீலகிரி மாவட்டப் பகுதிகளில் எரு மைக் கடாவையும் பந்தயங்களில் ஈடுபடுத்து கின்றனர்.  பந்தயத்தில் ஈடுபடும் காளைகளின் உய ரம், திறன், பலம் போன்றவற்றைக் கருத்தில்  கொண்டு இவற்றை நான்கு பிரிவுகளாக  பெரிய மாடு, நடுத்தர மாடு, கரிச்சான் மாடு,  பூஞ்சிட்டு மாடு என வகைப்படுத்துகின்றனர். பந்தய தூரம் மாடுகளின் வகைகளை வைத்தே முடிவுசெய்யப்படுகின்றது.

தமிழ் நாட்டின் அய்யம்பாளையம் என்ற ஊரில் நடக் கும் பந்தயத்தில் பெரிய மாடு 15 கி.மீ தூரமும்,  நடுத்தரம் 12 கி.மீ தூரமும், கரிச்சான் 10 கி.மீ தூரமும், பூஞ்சிட்டு 7 கி.மீ தூரமும் ஓட  வேண்டும் என்று தீர்மானித்துள்ளனர். இத்தகைய ரேக்ளா போட்டிக்கு ஆண்டு தோறும் பழைய வண்டிகளையும் புதுப் பித்து தயாராக்குகின்றனர்.    அந்தவகையில், சேலம் நெத்தி மேட்டில் உள்ள பட்டறை மிக வும் சிறப்பு வாய்ந்தவை. இந்த பட்டறை யில் இருந்து நவீன மற்றும் அதி வேகமாக  செல்லும் வகையிலான ரேக்ளா வண்டிகளை  தயார் செய்யப்படுகின்றன. இதனை  ஜெகதீ சன் மற்றும் அவரது மகன் சிவக்குமார் தயா ரித்து கொடுக்கின்றனர். மாநிலத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் ரேக்ளா வண்டிகளை ஆர்டர் கொடுத்து, செய்து வாங்கிச் செல்கின்றனர். இதில் 2 காளை மாடுகள், ஒரு காளை மாடு பூட்டப் படும் வகையிலான ரேக்ளா வண்டிகளும், குதிரை பூட்டப்படும் ரேக்ளா வண்டிகளும் தயாரித்து வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் திருச்சி, தஞ்சாவூர், பட்டுக் கோட்டை, கும்பகோணம், திருவண்ணா மலை, சென்னை, வேலூர் பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் வந்து புதிய  ரேக்ளா வண்டிகளை வாங்கிச்சென்றுள்ள னர். தேக்கு மற்றும் கருவேல மரத்தில் ஒரு வர், இருவர், 4 பேர் அமரும் வகையிலான  

ரேக்ளா வண்டிகளையும் தயாரித்து கொடுத் துள்ளனர். இந்த வண்டிகள் அனைத்தும் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி நடக் கும் பந்தயங்களில் களம் காணுகிறது. இதுகுறித்து ரேக்ளா வண்டி தயாரிப்பில்  ஈடுபட்டுள்ள சிவக்குமார் கூறுகையில்,  ‘தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில், எங்களது பட்டறையில் தலை முறை தலைமுறையாக ரேக்ளா வண்டிகளை  தயாரித்து விற்று வருகிறோம். நவீன கால மாக மாறி வந்தாலும், நமது பாரம்பரிய விளை  யாட்டுகளில் ஒன்றான ரேக்ளாவை இளை ஞர்கள் இன்னும் விரும்புகின்றனர்.  அதனால்  இத்தகைய போட்டிகள் தொடர்ந்து நடத்தப் படுகிறது. அதற்கு ஏற்றவாறு வண்டிகளை தயாரித்து வழங்குகிறோம்.  தற்போது கர்நாட காவில் இருந்தும் ஆர்டர் பெற்று வண்டிகள்  தயாரித்து கொடுத்துள்ளதாக தெரிவித்துள் ளனர். சேலம் மாவட்டத்திற்கு என பல்வேறு பெருமைக்குரிய தொழில்கள் இருந்தாலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடை பெறும் போட்டிகளுக்காக  தயாராகும் ரேக்ளா வண்டிகள் சேலத்திற்கு கூடுதல் பெருமை. அரசின் சார்பில் கண்காட்சி நடத்த  வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை  விடுத்தனர்.                                                            -சேலம் எழில்