districts

img

தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு: 600 காளைகள் பங்கேற்பு

சேலம், பிப்.25- தம்மம்பட்டியில் நடைபெற்ற ஜல் லிக்கட்டுப் போட்டியில் 600 காளைகள் பங்கேற்றன. சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட் டம், தம்மம்பட்டியில் ஞாயிறன்று நடை பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்து வப் பரிசோதனை மேற்கொண்ட பின் னரே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. 108 அவசர சிகிச்சை வாகனம், காவல்துறை பாதுகாப்பு, பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற் கொள்ளப்பட்டன. நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில், ஜல்லிக் கட்டுப் போட்டி முழுவதையும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. மேலும், விழாக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர் கள் அரசின் அனைத்து விதிமுறைகளை யும் முழுமையாகக் கடைபிடிக்க வேண் டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. முன்னதாக, ஜல்லிக்கட்டுப் போட்டியில் அரசு விதிமுறைகள் குறித்து பின்பற்ற வேண்டிய உறுதிமொழியினை மாவட்ட  ஆட்சியர் வாசிக்க, தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற் றுக்கொண்டனர். இப்போட்டியில் பல் வேறு பகுதிகளிலிருந்து 600 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, ஆத்தூர்  வருவாய் கோட்டாட்சியர் தா.பிரியதர் ஷினி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மற்றும் சண்முகம், உள் ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.